தமிழகம்

இளம்பெண் மீது தீராத ஆசை.. மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை : 68 வயது முதியவரின் வெறிச்செயல்!

இளம்பெண்ணை தனது இச்சைக்கு பயன்படுத்த மயக்க மருந்து கொடுத்து காரியத்தை சாதித்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை, மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி காலனி திரு.வி.க நகரை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். (68 வயது) பிசியோதெரபிஸ்ட் இவருக்கு சமூக வலைத்தளம் மூலம் 23 வயதான இளம் பெண் அறிமுகமானார்.

அவர் கட்டிடக் கலை நிபுணர் ஆவார். அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இதை அடுத்து அவர்கள் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நேரில் சந்தித்து பேசினர்.

அப்பொழுது ஆனந்த கிருஷ்ணன் தனது வீட்டை நேரில் பார்வையிட்டு புதுப்பித்து கட்டி தர வேண்டும் என்று அந்த இளம் பெண்ணிடம் கூறி உள்ளார்.

அதன் பேரில் அந்த இளம் பெண் அவருடைய வீட்டுக்குச் சென்றார். அப்பொழுது வீட்டில் யாரும் இல்லை அந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர்.

அந்த இளம் பெண்ணுக்கு டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உள்ளார். அதை குடித்ததும் இளம்பெண் மயங்கி விட்டார். இதை அடுத்து ஆனந்த கிருஷ்ணன் அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

மேலும் படிக்க: “மாதவிடாய் வலியோடு எப்படி வர்றது சார்” ; காம இச்சைக்காக மாணவியை அழைக்கும் ஆசிரியர்… அதிர்ச்சி ஆடியோ!!

மயக்கம் தெளிந்து எழுந்த இளம் பெண் தான் பலாத்காரம் செய்யப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஆனந்த கிருஷ்ணனிடம் கேட்டபோது வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

இது குறித்து அந்த இளம் பெண் கோவை மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் காவல் துறையினர் முறையாக விசாரணை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதை அடுத்து அந்த இளம் பெண் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இளம் பெண்ணின் புகார் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாநகர காவல் துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க: காலையில் கைதான மோகன் ஜி மாலையில் விடுதலை : சட்டவிரோதம் என நீதிபதி காட்டம்!

இதை அடுத்து உதவி கமிஷனர் கரிகால் பாரி சங்கர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் அந்த இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.

உடனே தேனி மாவட்டம் குமுளி பகுதியில் தலைமறைவாக இருந்த ஆனந்த கிருஷ்ணனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

7 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

8 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

9 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

10 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

11 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

13 hours ago

This website uses cookies.