தமிழகம்

கவுன்சிலிங் என்ற பெயரில் 50 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. சிக்கிய ‘டாக்டர்’!

நாக்பூரில், பல்வேறு பிரச்னைகளுக்கு கவுன்சிலிங் பெற வரும் பெண்களிடம் அத்துமீறி, மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் படிப்பு மற்றும் பணி ஆளுமைத் திறன் மேம்பாட்டிற்காக, பல்வேறு வகையான பயிற்சிகள் (கவுன்சிலிங்) அளிப்பதாக பெற்றோர்களிடம் வாக்குறுதி அளித்து, பல மாணவிகளை 45 வயதான உளவியல் மருத்துவர் அடங்கிய அந்த டாக்டர் குழுவினர் அழைத்துச் சென்று உள்ளனர்.

இதன்படி, நகரின் சந்திரபூர், பண்டாரா மற்றும் கோண்டியா உள்பட பல்வேறு பகுதிகளில் அவர்கள் முகாம் நடத்தி இருக்கின்றனர். பெரும்பாலும் மாணவர்களை விட, மாணவிகளை இந்தப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இதற்காக அவருடன் ஒத்துழைக்கும் சில பெற்றோரை, டாக்டர் தங்களது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வேலை வாய்ப்புகளை வழங்கி முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர்.

மேலும், பல இடங்களுக்கு மாணவிகளை உல்லாசப் பயணமாகவும் அழைத்துச் செல்லும் வழக்கத்தையும் அவர் கொண்டிருந்துள்ளார். முதலில் அவர்களுடன் நெருக்கமான புகைப்படங்களை எடுத்துக் கொள்ளும் அவர், பின்னர் அதைக் காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

பின்னர், கடந்த 15 ஆண்டுகளாக இந்த கொடூரச் செயலை அந்த டாக்டர் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரிடம் கவுன்சிலிங் பெற்ற 27 வயதான முன்னாள் மாணவி ஒருவர் தான் இந்த சம்பவத்தை தற்போது வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். இப்போது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

இதையும் படிங்க: வீட்டுக்குள் திடீரென நுழைந்த கும்பல்.. பெண்ணையும் விட்டு வைக்கவில்லை.. சென்னையில் கொடூரம்!

இருப்பினும், அவரை மிரட்டி தொடர்ந்து தனது இச்சைகளுக்கு பணிய வைத்து வந்து இருக்கிறார். ஒத்துழைக்காவிட்டால், அவருடைய கணவரிடம் உண்மையைச் சொல்லி விடுவேன் என்றும் அச்சுறுத்தி வந்துள்ளார்.

இதனையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மருத்துவரைக் கைது செய்த போலீசார், அவரிடம் பயின்று தற்போது மனைவியாக உள்ள பெண் மற்றும் மற்றொருவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

அஜித்தை அறிமுகப்படுத்திய எஸ்பிபி? எந்த பட!

அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியான நிலையில் அஜித்தின் அடுத்த படமான…

25 minutes ago

இதெல்லாம் மக்களுடன் ஒட்டவே ஒட்டாது… விஜய்யை ‘அது’ என ஒருமையில் பேசிய பிரபலம்..!

சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…

2 hours ago

அதிகாலையிலேயே அதிர்ச்சி… சிலிண்டர் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…

2 hours ago

ஜிவி தமிழ் சினிமாவின் பொக்கிஷம்…அனிருத் தாக்கப்பட்டாரா..பிரபல தயாரிப்பாளர் பேச்சு.!

கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…

13 hours ago

அந்த ஐட்டம் பாடலை நான் பாடி இருக்கக்கூடாது..ஓபனாக பேசிய ஷ்ரேயா கோஷல்.!

பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…

14 hours ago

நான் யாருனு காட்டுறேன்…நெருப்பை பற்றவைத்த ‘குட் பேட் அக்லி’ டீசர்.!

பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…

15 hours ago

This website uses cookies.