Categories: தமிழகம்

கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் மீது பாலியல் புகார்.. விசாரணையில் மறுப்பு தெரிவித்த மாணவிகள் திடீர் போராட்டம்!

சென்னை அடையாறு கலாஷேத்ரா கல்லூரியில் பேராசிரியர் ஒருவர், மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சமூக வலைதளங்களில் செய்தி வைரலானது.

இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தனது சமூக வலைதளப் பக்கம் மூலமாக தமிழக டிஜிபி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

பின்னர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி மாணவி, தன் பெயரைக் களங்கப்படுத்தும் வகையில் சிலர் பொய்யாக பாலியல் புகாரை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகவும், அது போன்று எந்த சம்பவமும் நிகழவில்லை என்றும், அவதூறு பரப்பிவரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து அடையாறு அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் திடீரென தமிழக டிஜிபிக்கு அனுப்பிய புகாரை திரும்பப்பெற்றது.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவி தன் பெயரில் பொய்யான புகார் சமூக வலைதளத்தில் பரவுவதாக தெரிவித்த காரணத்தினால் தமிழக போலீஸார் விசாரிக்கும் படி கூறியதை வாபஸ் பெற்றதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில் அடையாறு கலாஷேத்ராவில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா நேற்று மூன்று மணி்நேரம் ரகசியமாக விசாரணை நடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா அடையாறு கலாஷேத்ராவில் உள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்ட பிறகு, அவர் தொடர்புடைய மாநிலத்தில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா, உறுப்பினர் குஷ்புவை உடன் அழைத்துச் செல்லாமல் ரகசியமாக விசாரணை நடத்தியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்ட போது பாலியல் புகார் எதுவும் இல்லை என நிரூபணமாகியுள்ளது. ஆனால் கல்லூரி வளாகத்தில் இன்று மாணவிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஆணையம் விசாரணை நடத்திய போது கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உடனிருந்ததால் மாணவிகளால் வெளிப்படையாக குற்றத்தை கூற முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் இன்று கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக 4 பேராசிரியர்கள் மீது புகார் கொடுத்துள்ள மாணவிகள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், #WEWANTJUSTICE என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

திரைக்கு வந்து சில ‘நாட்களே’ ஆன… சன் டிவியிடம் சரண்டர்… சிக்கித் தவிக்கும் ஜனநாயகன்..!!

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…

20 minutes ago

திமுக கரை வேட்டி கட்டிக்கிட்டு பொட்டு வைக்காதீங்க.. யாரு சங்கினே தெரியாது : சர்ச்சை கிளப்பிய ஆ. ராசா!

நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…

45 minutes ago

சுரேஷ் கோபியின் பெயர் நீக்கம், 24 கட்… எம்புரான் மறு சென்சாரில் திடீர் மாற்றம்…

சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…

48 minutes ago

சொன்னதை செய்த அண்ணாமலை.. மேலிடம் கொடுத்த ஜாக்பாட் : 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு!

தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…

1 hour ago

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஆணுறுப்பை… மனைவியின் கொடூரம் : ஷாக் வீடியோ!

கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…

2 hours ago

உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…

அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…

3 hours ago

This website uses cookies.