தூத்துக்குடி ; காவல் நிலையத்தில் துப்புரவு பணிக்கு வந்த மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியை சார்ந்த முத்தம்மாள் என்ற 70 வயது மூதாட்டி நாள்தோறும் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்றும் காலை வழக்கம் போல பணிக்கு வந்த அவரிடம் தலைமை காவலர் செல்வகுமார் ரைட்டர் ரூமில் புகையிலை உள்ளது எடுத்துட்டு வா என கூறியுள்ளார்.
அதற்கு அந்த மூதாட்டி என்னால் முடியாது நான் கிளம்புகிறேன் எனக் கூறியுள்ளார். அப்படி என்றால் காசு கொடு என கேட்டு செல்வக்குமார் அந்த மூதாட்டியிடம் தொந்தரவு செய்து, அந்த மூதாட்டி அணிந்திருந்த ஜாக்கெட்டுக்குள் கையை விட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூக்குரலிட்டு இதுகுறித்து மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பனிடம் புகார் அளித்தார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து 70 வயது மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தனது பணிகளை சரிவர செய்யாமல் இருந்த தலைமை காவலர் செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.