சிகிச்சை அளித்த பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை.. குண்டர் சட்டத்தில் இருந்து வெளியே வந்த பாஜக பிரமுகர் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே பார்வதிபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார் இவர் கோட்டாறு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது சிகிச்சை அளித்த பெண் மருத்துவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக தெரிகிறது.
மேலும் பெண் மருத்துவரின் செல்போன் மூலமாகவும் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாகவும் கூறப்படுகிறது. நாளுக்கு நாள் இவரது தொல்லை அதிகரித்ததால் வேதனை அடைந்த பெண் மருத்துவர் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரிடம் பண மோசடியில் ஈடுபட்டது உட்பட ஜெயக்குமார் மீது பத்துக்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன 2022 ஆம் ஆண்டு இவர்கள் மீது குண்டர் சட்டம் வாய்ந்த நிலையில் நீண்ட நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகளில் செயல்பட்ட இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்து பாஜக பிரமுகராக வலம் வந்து கொண்டிருந்தார் இந்நிலையில் பெண் மருத்துவர் அளித்த பாலியல் தொடர்பான புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோயிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.