கன்னியாகுமரி மாவட்டம் வாத்தியார் வில்லை பகுதியை சேர்ந்த ஸ்ரீகண்டன் என்பவரின் மகன் ஸ்ரீ தர்ஷன் (22). இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறார்.
இவருக்கு அதே கல்லூரியில் படித்து வரும் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர்.
அந்த நேரத்தில் ஸ்ரீ தர்ஷன் இளம் பெண்ணுடன் அடிக்கடி வெளியில் சென்று உல்லாசமாக இருந்து வந்து உள்ளார். அந்த நேரத்தில் அந்த இளம் பெண்ணுக்கு தெரியாமல் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஸ்ரீ தர்ஷன் எடுத்து வைத்ததாக கூறப்படுகிறது.
ஸ்ரீதர்சனின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த இளம் பெண் பேசுவதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் அந்த 21 வயது இளம்பெண் இடையர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே தனது தோழிகளை பார்ப்பதற்காக சென்று உள்ளார்.
அப்போது அங்கு வந்த ஸ்ரீ தர்ஷன் அந்த இளம் பெண்ணிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்து உள்ளார்.
பின்னர் ஆத்திரமடைந்த ஸ்ரீ தர்ஷன் அந்த இளம் பெண்ணுடன் தனிமையில் இருந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை காட்டி மிரட்டி உள்ளார்.
இதைத் தொடர்ந்து அந்த இளம் பெண் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதே போல அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் தேனியைச் சேர்ந்த இளம் பெண்ணிடமும் ஸ்ரீ தர்ஷன் காதலிப்பதாக கூறி பழகி உள்ளார்.
மேலும் அந்த நேரத்தில் தனிமையில் இருந்த போது ஆபாச புகைப்படங்களை ஸ்ரீ தர்ஷன் எடுத்து வைத்து உள்ளார்.
அந்த இளம் பெண்ணிடமும் ஸ்ரீ தர்ஷன் போட்டோக்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டி தகராறு செய்து உள்ளார். தொடர்ந்து இரண்டு
இளம் பெண்களும் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் காவல் துறையினர் கல்லூரி மாணவர் ஸ்ரீதர்ஷன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.