கன்னியாகுமரி மாவட்டம் வாத்தியார் வில்லை பகுதியை சேர்ந்த ஸ்ரீகண்டன் என்பவரின் மகன் ஸ்ரீ தர்ஷன் (22). இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறார்.
இவருக்கு அதே கல்லூரியில் படித்து வரும் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர்.
அந்த நேரத்தில் ஸ்ரீ தர்ஷன் இளம் பெண்ணுடன் அடிக்கடி வெளியில் சென்று உல்லாசமாக இருந்து வந்து உள்ளார். அந்த நேரத்தில் அந்த இளம் பெண்ணுக்கு தெரியாமல் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஸ்ரீ தர்ஷன் எடுத்து வைத்ததாக கூறப்படுகிறது.
ஸ்ரீதர்சனின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த இளம் பெண் பேசுவதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் அந்த 21 வயது இளம்பெண் இடையர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே தனது தோழிகளை பார்ப்பதற்காக சென்று உள்ளார்.
அப்போது அங்கு வந்த ஸ்ரீ தர்ஷன் அந்த இளம் பெண்ணிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்து உள்ளார்.
பின்னர் ஆத்திரமடைந்த ஸ்ரீ தர்ஷன் அந்த இளம் பெண்ணுடன் தனிமையில் இருந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை காட்டி மிரட்டி உள்ளார்.
இதைத் தொடர்ந்து அந்த இளம் பெண் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதே போல அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் தேனியைச் சேர்ந்த இளம் பெண்ணிடமும் ஸ்ரீ தர்ஷன் காதலிப்பதாக கூறி பழகி உள்ளார்.
மேலும் அந்த நேரத்தில் தனிமையில் இருந்த போது ஆபாச புகைப்படங்களை ஸ்ரீ தர்ஷன் எடுத்து வைத்து உள்ளார்.
அந்த இளம் பெண்ணிடமும் ஸ்ரீ தர்ஷன் போட்டோக்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டி தகராறு செய்து உள்ளார். தொடர்ந்து இரண்டு
இளம் பெண்களும் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் காவல் துறையினர் கல்லூரி மாணவர் ஸ்ரீதர்ஷன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.