திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (31) என்பவர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹேமா(28) தனது 8 வயது குழந்தையுடன் கேரளாவில் நடைபெற்ற தோழியின் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இன்று மீண்டும் திருப்பூர் திரும்பினார்.
பொள்ளாச்சி வந்த இவர் அங்கிருந்து திருப்பூருக்கு பேருந்தில் புறப்பட்டார். இவருடன் பேருந்தின் பின் இருக்கையில் பயனித்த சக பயணி ஒருவர் இவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
முதலில் ஹேமா எச்சரித்த நிலையில் அந்த நபர் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த ஹேமா பேருந்தில் நடத்துநரிடம் புகார் தெரிவித்து சப்தமிட துவங்கி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சக பயணிகள் அந்த நபரை பிடித்து தாக்க துவங்கி உள்ளனர். பின்னர் அவர்களிடமிருந்து அந்த நபரை மீட்ட நடத்துநர் திருப்பூர் கலைஞர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள திருப்பூர் தெற்கு காவல் நிலைய காவலர்களிடம் தகவல் தெரிவித்து ஒப்படைத்தனர்.
தகவல் தெரிந்து பேருந்து நிலையம் வந்த ஹேமாவின் கணவர் செல்வராஜ் மற்றும் ஹேமா கொடுத்த புகாரின் பேரில் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
This website uses cookies.