கரூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் அருகில் ‘ஸ்பா’ என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக பரபரப்பு புகார் எழுந்து உள்ளது.
கரூர்: கரூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் அருகில் ‘ஸ்பா’ என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக, வழக்கறிஞர் ஒருவர் வீடியோ ஆதாரங்கள் உடன் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக புகார் மனு அளித்து உள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கரூர் பசுபதி ஈஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடந்து கொண்டு வந்திருக்கிறது.
இது குறித்து அப்பள்ளியில் பயிலும் சில மாணவிகள் என்னிடம் கூறினர். எனவே, இதனை வைத்து நான் கடந்த 3 மாதங்களாக தீர விசாரித்தேன். இது குறித்து எனது சார்பில் விசாரிக்கும்போது, அந்த ஸ்பாவில் நுழைவுக் கட்டணமாக ஆயிரம் ரூபாயும், உள்ளே Happy Ending என்ற பெயரில் பெண்களுக்கு தனியாக 2 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கின்றனர். இது போன்ற செயல் கரூரில் மட்டும் 4 இடங்களில் நடக்கிறது.
இது குறித்தான அனைத்து ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. உள்ளே ஸ்பாவில் சென்ற உடன், பெண்களை அழைத்து வந்து, உங்களுக்குப் பிடித்த பெண்ணை தேர்வு செய்து எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறுவார்கள். அது மட்டுமல்லாமல், இந்த ஸ்பா, நகராட்சியின் அனுமதிச் சான்றிதழ் மற்றும் உரிமம் ஆகியவற்றுடனே நடைபெற்று வருகிறது. முதலில், இந்த ஸ்பாவில் சிசிடிவி கேமராக்கள் இருக்க வேண்டும், யார் வருகிறார்கள், அவர்கள் என்ன சேவையைப் பெறுகிறார்கள் என்ற குறிப்பேடு இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: நடுவீட்டில் 3 நாட்களாக வைத்த தந்தையின் சடலம்.. ஊரே வெறுத்த சகோதரர்களின் நிலத்தகராறு!
முக்கியமாக இந்த ஸ்பாவில் வேலை செய்பவர்கள் ஒரு வருட காலம் தெரபிஸ்ட் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும், ஆனால் இவை எதுவுமே அந்த ஸ்பாவில் இல்லை. இதற்காக தமிழக அரசில் தனிக் கமிட்டியே உள்ளது. இவ்வளவு இருந்தும் இவ்வாறு சுதந்திரமாக செயல்படுகிறது என்றால், அதிலும் குறிப்பாக கரூரில் உதவி ஆய்வாளார் நாகராஜ் வந்த பிறகே இவ்வாறு நடக்கிறது. அவர் பணமும் பெறுகிறார். எனவே, இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
This website uses cookies.