கரூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் அருகில் ‘ஸ்பா’ என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக பரபரப்பு புகார் எழுந்து உள்ளது.
கரூர்: கரூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் அருகில் ‘ஸ்பா’ என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக, வழக்கறிஞர் ஒருவர் வீடியோ ஆதாரங்கள் உடன் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக புகார் மனு அளித்து உள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கரூர் பசுபதி ஈஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடந்து கொண்டு வந்திருக்கிறது.
இது குறித்து அப்பள்ளியில் பயிலும் சில மாணவிகள் என்னிடம் கூறினர். எனவே, இதனை வைத்து நான் கடந்த 3 மாதங்களாக தீர விசாரித்தேன். இது குறித்து எனது சார்பில் விசாரிக்கும்போது, அந்த ஸ்பாவில் நுழைவுக் கட்டணமாக ஆயிரம் ரூபாயும், உள்ளே Happy Ending என்ற பெயரில் பெண்களுக்கு தனியாக 2 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கின்றனர். இது போன்ற செயல் கரூரில் மட்டும் 4 இடங்களில் நடக்கிறது.
இது குறித்தான அனைத்து ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. உள்ளே ஸ்பாவில் சென்ற உடன், பெண்களை அழைத்து வந்து, உங்களுக்குப் பிடித்த பெண்ணை தேர்வு செய்து எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறுவார்கள். அது மட்டுமல்லாமல், இந்த ஸ்பா, நகராட்சியின் அனுமதிச் சான்றிதழ் மற்றும் உரிமம் ஆகியவற்றுடனே நடைபெற்று வருகிறது. முதலில், இந்த ஸ்பாவில் சிசிடிவி கேமராக்கள் இருக்க வேண்டும், யார் வருகிறார்கள், அவர்கள் என்ன சேவையைப் பெறுகிறார்கள் என்ற குறிப்பேடு இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: நடுவீட்டில் 3 நாட்களாக வைத்த தந்தையின் சடலம்.. ஊரே வெறுத்த சகோதரர்களின் நிலத்தகராறு!
முக்கியமாக இந்த ஸ்பாவில் வேலை செய்பவர்கள் ஒரு வருட காலம் தெரபிஸ்ட் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும், ஆனால் இவை எதுவுமே அந்த ஸ்பாவில் இல்லை. இதற்காக தமிழக அரசில் தனிக் கமிட்டியே உள்ளது. இவ்வளவு இருந்தும் இவ்வாறு சுதந்திரமாக செயல்படுகிறது என்றால், அதிலும் குறிப்பாக கரூரில் உதவி ஆய்வாளார் நாகராஜ் வந்த பிறகே இவ்வாறு நடக்கிறது. அவர் பணமும் பெறுகிறார். எனவே, இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.