புதுச்சேரி : புதுச்சேரியில் அரசு பேருந்து ஷேர் ஆட்டோவை உரசியதில் ஆட்டோ கவிழ்ந்து 15 பேர் படுகாயம் அடைந்த விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது
புதுச்சேரி கடலூர் எல்லையில் இருந்து புதுச்சேரி நகர பகுதிக்கு செல்லும் வழியில் நடுவே உள்ள தமிழக பகுதியான ரெட்டிச்சாவடிக்கு ஏராளமான ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று கடலூரில் இருந்து ஷேர் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கன்னியக்கோவில் வழியாக ரெட்டிசாவடிக்கு செல்லும் போது அரசு பேருந்து ஒன்று ஷேர் ஆட்டோவை உரசியதை அடுத்து ஷேர் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து சாலை ஓரத்தில் விழுந்தது. இதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் சாலையில் விழுந்தனர்.
இந்த விபத்தில் 8 மாத கர்ப்பிணி, குழந்தை உட்பட 15 பேர் காயமடைந்தனர். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில் அரசு பேருந்து ஒன்று ஷேர் ஆட்டோவை முந்தி செல்லும் போது ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானது பதிவாகி இருந்தது. இதனை அடுத்து விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.