புதுச்சேரி : புதுச்சேரியில் அரசு பேருந்து ஷேர் ஆட்டோவை உரசியதில் ஆட்டோ கவிழ்ந்து 15 பேர் படுகாயம் அடைந்த விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது
புதுச்சேரி கடலூர் எல்லையில் இருந்து புதுச்சேரி நகர பகுதிக்கு செல்லும் வழியில் நடுவே உள்ள தமிழக பகுதியான ரெட்டிச்சாவடிக்கு ஏராளமான ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று கடலூரில் இருந்து ஷேர் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கன்னியக்கோவில் வழியாக ரெட்டிசாவடிக்கு செல்லும் போது அரசு பேருந்து ஒன்று ஷேர் ஆட்டோவை உரசியதை அடுத்து ஷேர் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து சாலை ஓரத்தில் விழுந்தது. இதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் சாலையில் விழுந்தனர்.
இந்த விபத்தில் 8 மாத கர்ப்பிணி, குழந்தை உட்பட 15 பேர் காயமடைந்தனர். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில் அரசு பேருந்து ஒன்று ஷேர் ஆட்டோவை முந்தி செல்லும் போது ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானது பதிவாகி இருந்தது. இதனை அடுத்து விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.