7 வருடங்களுக்கு பின் நெல்லையில் மீண்டும் அதிர்ச்சி.. அதே இடத்தில் தீக்குளித்த நபர் : விசாரணையில் ஷாக்!
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு காவல் சரகத்திற்கு உட்பட்ட மருதகுளத்தை சேர்ந்தவர் பெயர் சங்கரசுப்பு, (வயது 35). இவர் தனது குடும்பத்தில் உள்ள சொத்து பிரச்சினை காரணமாக மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அதற்கான சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்திருந்தார்.
அப்போது திடீரென தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பாதுகாப்புகள் நின்ற காவல்துறையினர் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து மீட்டனர்.
தொடர்ந்து அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலைக்கு முயன்ற சங்கரசுப்புவை மீட்க சென்ற ஆட்சியர் அலுவலக வாசலில் பணியாற்றும் உதவி காவல் ஆய்வாளர் அப்துல்ஹமீதுக்கும் கையில் லேசான தீ காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பணிக்கு வரும் போதெல்லாம் பாலியல் டார்ச்சர்.. செவிலியர் தற்கொலை முயற்சி : விசாரணையில் சிக்கிய மருத்துவர்.!
கடந்த 7வருடங்களுக்கு முன்பு 2017ஆம் ஆண்டு கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடலில் மண்ணென்ணை ஊற்றி தீக்குளித்தனர். உடனே மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டபோதும் அவர்கள் 4 பேரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மண்ணென்னை, பெட்ரோல் போன்ற எளிதில் தீ பிடிக்கக்கூடிய பொருட்கள் ஆட்சியர் அலுவலகத்தில் எடுத்து செல்ல கூடாத வகையில் உத்தரவிடப்பட்டது. கடும் சோதனைக்கு பிறகே மனுதாரர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்டனர். அன்றில் இருந்து இந்த உத்தரவு நடைமுறையில் இருந்து வரும் நிலையில் தற்போது எப்படி அந்த நபர் மண்ணென்ணை எடுத்து வந்தார் என போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.