பல்லடம் அருகே அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு மாணவிகள் இருவர் விஷம் அருந்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை எடுத்த காரணம்பேட்டையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கே சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் பள்ளி செயல்பட்டு வந்தது. அப்பொழுது பள்ளியில் இரு மாணவிகள் மயங்கி கீழே விழுந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அந்த மாணவிகளை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவர்களை சோதனை செய்த பொழுது அவர்கள் தண்ணீரில் எறும்பு மருந்து கலந்து குடித்தது தெரியவந்தது.
இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்ற பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட விசாரணையில் பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர் தனது வீட்டில் பெற்றோர்கள் சண்டையிட்டு கொண்டதால் தனது வாட்டர் பாட்டிலில் தண்ணீரில் எறும்பு மருந்தை கலக்கி பள்ளிக்கு கொண்டு வந்து குடிப்பதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.
மேலும் அந்த மாணவியின் அருகில் அமர்ந்திருந்த மாணவி அந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் அருந்தி உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த விஷப்பாட்டில் கொண்டு வந்த மாணவி பாட்டிலை பிடுங்கி மீதி தண்ணீரை அருந்தி உள்ளார். இதனை அடுத்து இருவரும் மயக்கம் அடைந்தது தெரியவந்தது.
விஷம் அருந்திய இரு மாணவிகளுக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.
தாய் தந்தை சண்டையிட்டு கொண்டதற்காக பள்ளி மாணவி பள்ளியில் விஷம் அருந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.