காதல் மனைவியை தேடித் தேடி வெட்டிய கணவன்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம் : நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை!
நீலகிரி மாவட்டம் இத்தலார் பகுதியைச் சேர்ந்தவர் மணி என்ற மணிகண்டன் இவர் 2011 ஆம் ஆண்டு அன்னபூரணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் அவர்கள் கோவை சாய்பாபா காலனி பகுதியில் வசித்து வந்தனர். இதை அடுத்து அன்னபூரணி அங்குள்ள ஒரு மளிகை கடைக்கு வேலைக்கு சென்று வந்தார்.
இதனால் மணிகண்டனுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. மேலும் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அன்னபூரணி கணவரை பிரிந்து வேறு பகுதியில் வசித்தார்.
இதற்கிடையே கடந்த 2016″ஆம் ஆண்டு மணிகண்டன் அன்னபூரணி வசிக்கும் பகுதிக்குச் சென்று அவரிடம் தகராறு செய்துள்ளார்.பின்னர் ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது மனைவியை தாக்கி கொலை செய்ய முயன்றார்.
இதில் படுகாயம் அடைந்த அன்னபூரணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார்.இது குறித்து சாய்பாபா காலனி காவல்துறையினர் கொலை முயற்சி என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவையில் உள்ள மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி வேதகிரி உத்தரவிட்டார்.
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
This website uses cookies.