சுற்றுலா பயணிகளை குறித்து வைத்து நடந்த அதிர்ச்சி சம்பவம் : கொடைக்கானலில் இளைஞர்கள் கைது!!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியில் போதை காளான் அதிக அளவில் விற்பதாக கிடைத்த தகவலை அடுத்து கொடைக்கானல் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பூண்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்களை விசாரித்ததில் மயிலாடுதுறையை சேர்ந்த நிஷாந்த் 22 , கொடைக்கானல் மேல் மலை பூண்டி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் 30 ஆகிய இருவரும் இந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்று வந்தது தெரிய வந்தது.
கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்று வந்த நிஷாந்த், தமிழ் செல்வன், ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து போதை காளானையும் கைப்பற்றினர். கொடைக்கானல் மலை கிராமத்தில் போதை காளான் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
This website uses cookies.