Categories: தமிழகம்

செம போதையில் மட்டையான விஏஓ… அலுவலகத்தில் குறட்டை விட்டு தூங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வடகரை தாழனூர் கிராம நிர்வாக அலுவலராக ஒட்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் பணியாற்றி வருகிறார்,
இவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் தினமும் குடித்துவிட்டு பணிக்கு வருவதாக பல குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்த நிலையில் இன்று அலுவலகத்தில் ஓவராக மது குடித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தபடி தூங்கி கொண்டு இருந்துள்ளார்,

பல்வேறு ஆவணங்கள் பெறுவதற்கு பொதுமக்கள் வந்த போது போதையில் தூங்கியதால் என்ன செய்வது என்று தெரியாமல் அவரை அதிக நேரம் எழுப்பியும் எந்திரிக்காமல் போதையில் தூங்கியவாறு இருந்துள்ளார்,

பொதுமக்கள் உங்களிடம் எத்தனை முறை நாங்கள் சொல்வது குடித்துவிட்டு அலுவலகத்துக்கு வர வேண்டாம் என்று என்று அவரிடம் கேட்டபோது ஒன்றும் தெரியாதது போல் அலுவலகத்தை விட்டு வெளியே சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,

இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதே போன்று கண்டாச்சிபுரம் தாலுகாவில் பல்வேறு கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலக நேரத்தில் பணிக்கு வராமல் மதுபோதையில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது, தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்

மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…

5 minutes ago

சீரியல் நடிகை கொலை வழக்கில் டுவிஸ்ட்.. உல்லாசமாக இருந்த கோவில் பூசாரிக்கு மரண தண்டனை!

சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…

18 minutes ago

சிஎஸ்கே வீரருடன் காதல்.. இலங்கை மருமகளாகும் விஜய் டிவி சீரியல் நடிகை?!

சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…

43 minutes ago

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு.. முக்கிய தலைவர் கடும் குற்றச்சாட்டு!

சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…

1 hour ago

ராஷ்மிகா மந்தனாவின் கையை பிடித்து தரதரவென இழுத்து? பொது இடத்தில் சல்மான் கான் செய்த காரியத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…

சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…

1 hour ago

பிரதமர் மோடி பதவி விலகல்? தேசிய களத்தில் சூடுபிடித்த முக்கிய கருத்து.. பாஜக நிலைப்பாடு என்ன?

பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…

2 hours ago

This website uses cookies.