கொலை குற்றவாளியை கைது செய்த போது தப்பியோட முயன்ற குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் கடந்த சனிக்கிழமை அன்று இர்பான் என்பவர் பேருந்து நிலையம் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரிச்சர்ட் சச்சின் என்பவரை திண்டுக்கல் மாலைப்பட்டி சுடுகாடு பகுதியில் விசாரணைக்கு அழைத்து சென்றபோது காவலர் அருணை தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற ரவுடி ரிச்சர்ட் சச்சினின் வலது காலில் சுட்டு பிடித்தனர்.
இர்பான் கொலை செய்துவிட்டு கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் அப்பொழுது அவர்கள் உடுத்தி இருந்த ஆடைகளை பதுக்கி வைத்திருந்த இடத்தில் இருந்து கைப்பற்றுவதற்காக அழைத்துச் சென்றனர்.
ஆடைகளை எடுத்து கொடுக்கும்போது காவலர்களை எதிர்த்து தாக்கியுள்ளார். காவலர் அருணை தாக்கி விட்டு சச்சின் ஓட முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது.
அப்போது ஆய்வாளர் வெங்கடாசலபதி மற்றும் காவலர்கள் அவரை எச்சரித்துள்ளனர். இதைத்தொடர்ந்து எச்சரித்துக் கொண்ட போலீசார் அவரை வலது கால் முட்டி பகுதியில் சுட்டு பிடித்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் பலத்த காயம் அடைந்த ரவுடி ரிச்சர்ட் சச்சினை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.