Categories: தமிழகம்

தண்ணீர் பாட்டில் வாங்க சென்ற சிறுவனுக்கு ‘பளார்’ விட்ட கடைக்காரரால் பரபரப்பு : ஷாக் வீடியோ!!

பழனியில் தண்ணீர் பாட்டில் வாங்கிய சிறுவனிடம் செல்லாத ரூபாய் நோட்டுக்களை கொடுத்தவரிடம் வேறு ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தரும்படி கேட்டதால், ஆத்திரமடைந்த கடைக்காரர் சிறுவனை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவை சேர்ந்த பக்தர்கள் பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர். அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தை மற்றும் குழந்தைகளும் பாதயாத்திரையாக சென்றனர்.

இன்று காலை பழனி அடிவாரம் தேவர் சிலை அருகே நடந்து சென்றபோது பாதயாத்திரையாக சென்றவர்களில் 10வயதான சுசீந்திரன் என்ற சிறுவன் அருகிலுள்ள கடையில் தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக சென்றான்.

அப்போது கடையில் இருந்த வயதான முதியவரிடம் 500ரூபாய் நோட்டை கொடுத்த சிறுவன் 5 லிட்டர் தண்ணீர் கேன் ஒன்றை விலைக்கு வாங்கினான்.

அப்போது கடைக்காரர் சிறுவனிடம் வாங்கிய 500 ரூபாயை பெற்றுக்கொண்டு மீதி தொகை வழங்கியுள்ளார். கடைக்காரர் கொடுத்த ரூபாய் நோட்டுக்களில் செல்லாத ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாகவும் அவற்றை மாற்றித் தரும்படி சிறுவன் கேட்டதை அடுத்து, ஆத்திரமடைந்த கடைக்காரர் சிறுவனின் கன்னத்தில் அமைத்துள்ளார்.

இதை கண்ட சிறுவனின் பெற்றோர் ஆவேசமடைந்து கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்களும் பெற்றோருக்கு ஆதரவாக கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகலறிந்து வந்த பழனி நகர் காவல் ஆய்வாளர் உதயகுமார் சிறுவனை தாக்கிய முதியவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து முதியவரை எச்சரித்த போலீசார், சிறுவனின் பெற்றோரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பாதயாத்திரையாக வந்த சிறுவனை கடைக்காரர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

5 hours ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

5 hours ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

7 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

7 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

8 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

8 hours ago

This website uses cookies.