காஞ்சிபுரம் நகர் பகுதியில் பட்டா கத்தியுடன் வலம் வந்த கஞ்சா போதை இளைஞர்கள் “கஞ்சா வாங்க பணம்” கேட்டு வழியில் வந்த ஏழு பேர்களை தாக்கிவிட்டு பணம் மற்றும் செல்போன் கொள்ளையடித்த சம்பவம் நகரில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குள்ளப்பன் தெரு பகுதியில் விமல் என்பவர் வீட்டிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு மாஸ்க் அணிந்து கஞ்சா போதையில் வந்த மூன்று இளைஞர்கள் கடையில் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளார்கள். விமல் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதை கேட்ட கஞ்சா போதை இளைஞர்கள் கடையில் இருந்த மாவு பாக்கெட்டை தூக்கி வீசி விட்டு கடைக்குள் நுழைந்து பட்டா கத்தியால் கடைக்காரரை தாக்கியுள்ளனர். மேலும், கல்லாவில் இருந்த பணத்தையும், செல்போனையும் எடுத்துக் கொண்டு, கஞ்சா போதை ஆசாமிகள் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றனர்.
இதே போன்று, சின்ன காஞ்சிபுரம் பகுதியை சுற்றிலும் அடுத்தடுத்த கடை மற்றும் பொதுமக்களை பட்டா கத்தியால் தாக்கியுள்ளனர். கஞ்சா ஆசாமிகள் தாக்கியதில் ஏழு பேர் படுகாயங்களுடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் கஞ்சாவால் அதிக குற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், காஞ்சிபுரம் நகரிலும் தினந்தோறும் கஞ்சா போதை ஆசாமிகளால் வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
பட்டா கத்தியுடன் தப்பி சென்ற கஞ்சா போதை இளைஞர்கள் குறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் சிசிடிவி காட்சியை கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சமீப நாட்களாக காஞ்சிபுரம் நகரில் மீண்டும் ரவுடிகளின் ராஜ்ஜியம் தலைதூக்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.