திருப்பூர் : அவிநாசி பேரூராட்சி தலைவர் தேர்ந்தெடுப்பதில் கடும் இழுபறிக்கு பின்னர் திமுகவை சேர்ந்த தலைமை அறிவித்த வேட்பாளர் வெற்றி பெற்றார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுகவினர் கோஷ்டி பூசலால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தேர்தலில் போட்டியிட்ட திமுக தலைமை அறிவித்த வேட்பாளர், போட்டி திமுக வேட்பாளர், அதிமுக வேட்பாளர் என மூன்று பேரும் தலா 6 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்ததால் குலுக்கல் முறையில் தேர்தல் நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
திமுகவில் உட்கட்சி பூசல் உச்சத்தை தொட்டதால் தலைவர் தேர்தலில் திமுகவில் இரண்டு பேர் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு சம அளவில் தலா 6 -வாக்குகள் பெற்றனர். தலைவரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்தது.
இதையடுத்து குலுக்கல் முறையில் இருவரை தேர்ந்தெடுத்து பின் மீண்டும் வாக்குப் பதிவு முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டு குலுக்கல் நடத்தப்பட்டது. குலுக்கலில் தி.மு.க. அதிகாரபூர்வ வேட்பாளர் தனலட்சுமி மற்றும் அ.தி.மு.க வேட்பாளர் சித்ரா என இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையே வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களின் வாக்குப்பதிவு நடந்தது. அதில் தி.மு.க. சேர்ந்த தலைட்சுமி 10 வாக்குகள் பெற்றும், அ.தி.மு.க வேட்பாளர் சித்ரா 8 வாக்குகள் பெற்றதால், அவிநாசி பேரூராட்சி தலைவராக தி.மு.க தனலட்சுமி வெற்றி பெற்றார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.