Categories: தமிழகம்

குலை தள்ளிய வாழைகள்… ஒரே இரவில் 700 வாழை மரங்கள் அடியோடு நாசம் : காட்டு யானைகள் அட்டகாசத்தால் விளைநிலங்கள் சேதம்.. கதறி அழுத விவசாயி!!

மேட்டுப்பாளையம் தோலம்பாளையம் மணல்காடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் காட்டு யானைகள் புகுந்ததால் 700 க்கும் மேற்பட்ட வாழைகளை முறித்து சேதமடைந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான ஓடந்துறை, நெல்லித்துறை, ஊமப்பாளையம், தாசம்பாளையம், குரும்பனூர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது.

சமீபகாலமாக உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் புகும் காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

குறிப்பாக கடந்த பல நாட்களாகவே தாசம்பாளையம், குரும்பனூர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் தொடர்ந்து விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் செய்வதறியாது கவலையுடன் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு தோலம்பாளையம் மணல்காடு பகுதிகளில் மக்கள் வசிக்கும் பகுதியின் அருகிலேயே முகாமிட்ட காட்டு யானைகள் கூட்டம் ஒன்று ராமசாமி என்பவரது விளைநிலத்தில் சோலார் மின்வேலியினை உடைத்து உள்ளே புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் 700 க்கும் மேற்பட்ட குலை தள்ளிய வாழைகளை முறித்து சாப்பிட்டதோடு, மிதித்தும் நாசம் செய்துள்ளன.

இதனால் இந்த வாழை விவசாயத்தை நம்பி கடன் வாங்கி விவசாயம் செய்து வந்த விவசாயி ராமசாமியின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறுகையில் காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் தங்களை கருணைக்கொலை செய்ய வேண்டும் என மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டாமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

நாளைக்குள் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இல்லையென்றால் யானைகளால் நாசம் செய்யப்பட்ட பயிர்களை வனத்துறை அலுவலகம் முன்பு கொட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அதற்கும் தீர்வு எட்டப்படாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.இதுகுறித்து விவசாயி சந்திரகுமார் கூறுகையில் ஒரு வாழை பயிரிட்டு முதிர்வு வரை சுமார் ரூ.500 ஒரு வாழைக்கு தேவைப்படுகிறது. இவ்வாறு காட்டு யானைகளின் அட்டகாசத்தால் நம்பிக்கையில்லாத விவசாயமாக மாறி வருவதாக கவலை தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

22 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

22 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

23 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

23 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

1 day ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

1 day ago

This website uses cookies.