குளத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலியல் புகாரில் சிக்கிய விவகாரத்தில் இன்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளராகவும் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளராகவும் பணிபுரிந்து வருபவர் ஆனந்த தாண்டவம். இவர் மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த போது, அங்கு புகார் கொடுக்க வந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்போது அந்தப் பெண் மதுரை ஐ.ஜி-யிடம் புகார் மனு அளித்ததாக தெரிகிறது.
இதையடுத்து, அவர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையே அந்தப் பெண் கொடுத்த புகார் மீது நடத்தப்பட்ட விசாரணையில், அது உண்மை எனத் தெரியவந்தது. இது தொடர்பாக தென் மண்டல ஐஜி-யிடம் விசாரணை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்தனர். அதன் பெயரில் குளத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவத்தை சஸ்பெண்ட் செய்ய தென் மண்டல ஐஜி உத்தரவிட்டார். இந்த சம்பவம் காவல்துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.