Categories: தமிழகம்

நிர்வாணமாக உடலில் விபூதியை பூசிக்கொண்டு காட்சி தந்த சித்தர் : காண வந்த அகோரிகளின் விநோத பூஜை.. பொதுமக்கள் வழிபாடு..!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தகரக் கொட்டை சித்தர் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியனை அகோரிகள் ஐந்து நபர்கள் பூஜை செய்தும், அதில் ஒருவர் தலைகீழாக நின்று பூஜை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்.

கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலை அரவக்குறிச்சி அருகில், மலைக்கோவிலூர் பகுதியில் நெடுஞ்சாலை சென்ட்ரல் மீடியாவில் அமர்ந்திருந்த சுப்பிரமணி என்பவரை, மலைக்கோவில் சித்தர் என்று அழைத்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர்.

அவரை அங்கிருந்து அருகில் இருந்த காலி இடத்தில் தகரக் கொட்டாய் அமைத்து அதில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து தகர கொட்டாய் சித்தராக உருவாக்கி வழிபட்டு வருகின்றனர்.

இவர் சேலம் மாவட்டத்தைச் சார்ந்தவர். பெயர் சுப்பிரமணி எனவும் அரசு பேருந்து செக்கராக பணிபுரிந்த இவர், குடும்ப பிரச்சினை காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதிக்கு வந்ததாக கூறுகின்றனர்.

கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக இவர் குடும்பத்தை விட்டு வெளியேறி வந்த இவரை அவரது உறவினர்கள் பல முறை அழைத்துள்ளனர். ஆனால், அவர் செல்ல மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இவர் இப்பகுதியிலேயே தங்கிவிட்டார். பின்னர், இவர் “மலைக்கோவிலூர் சித்தர், சுப்பிரமணிய சுவாமி சித்தர் ” என்ற பல்வேறு பெயர்களில் மக்கள் அழைக்க தொடங்கி விட்டனர். நிர்வாணக் கோலத்தில் உடல் முழுவதும் விபூதியை பூசி காட்சி தருகிறார்.

இந்நிலையில் இன்று வெளி மாவட்டங்களில் இருந்து 5 சித்தர்கள் இன்று அவரை பார்ப்பதற்காக வந்துள்ளனர், அப்போது ஒருவர் மட்டும் கால்களை தூக்கிக் கொண்டு பூஜை செய்துள்ளார்.

இதனை அருகில் இருந்த பொதுமக்கள் பார்த்து அவரையும் வணங்கி நின்றனர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த மலைக்கோவிலூர் சித்தர் என்று அழைக்கப்படுபவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று ஒரு சிலர் கூறி வந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் இவரை தரிசனம் செய்வதற்காக உள் மாவட்டங்கள் மட்டுமல்லாது பல்வேறு வெளி மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்களும் கார் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்து தரிசனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக மலைக்கோவில் சித்தர் என்று அழைக்கப்படுபவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் இவரை சித்தராக வழிபடுகின்றனர் என்றும் ஒரு சிலர் மாவட்ட ஆட்சியரிடம் , காவல்துறையிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நண்பனின் தங்கைக்கு மோசமான மெசேஜ்.. வீட்டுக்கே சென்ற அத்துமீற முயன்ற VIRTUAL WARRIORS!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…

38 seconds ago

ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்! பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாளவிகா மோகனன்? அடக்கடவுளே!

ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…

23 minutes ago

கைமாறியது விஜய் டிவி… கோபிநாத், பிரியங்கா, மகாபா ஆனந்தை நீக்க முடிவு!

விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…

38 minutes ago

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல்? இபிஎஸ் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…

59 minutes ago

சமந்தாவின் மூன்றாவது காதலர்? விரைவில் டும் டும் டும்! அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுக்குறாரே?

தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…

1 hour ago

இளம்பெண் கொடூர கொலை… நள்ளிரவில் சரணடைந்த குற்றவாளி : கோவையில் பகீர்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…

2 hours ago

This website uses cookies.