Categories: தமிழகம்

நிர்வாணமாக உடலில் விபூதியை பூசிக்கொண்டு காட்சி தந்த சித்தர் : காண வந்த அகோரிகளின் விநோத பூஜை.. பொதுமக்கள் வழிபாடு..!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தகரக் கொட்டை சித்தர் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியனை அகோரிகள் ஐந்து நபர்கள் பூஜை செய்தும், அதில் ஒருவர் தலைகீழாக நின்று பூஜை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்.

கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலை அரவக்குறிச்சி அருகில், மலைக்கோவிலூர் பகுதியில் நெடுஞ்சாலை சென்ட்ரல் மீடியாவில் அமர்ந்திருந்த சுப்பிரமணி என்பவரை, மலைக்கோவில் சித்தர் என்று அழைத்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர்.

அவரை அங்கிருந்து அருகில் இருந்த காலி இடத்தில் தகரக் கொட்டாய் அமைத்து அதில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து தகர கொட்டாய் சித்தராக உருவாக்கி வழிபட்டு வருகின்றனர்.

இவர் சேலம் மாவட்டத்தைச் சார்ந்தவர். பெயர் சுப்பிரமணி எனவும் அரசு பேருந்து செக்கராக பணிபுரிந்த இவர், குடும்ப பிரச்சினை காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதிக்கு வந்ததாக கூறுகின்றனர்.

கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக இவர் குடும்பத்தை விட்டு வெளியேறி வந்த இவரை அவரது உறவினர்கள் பல முறை அழைத்துள்ளனர். ஆனால், அவர் செல்ல மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இவர் இப்பகுதியிலேயே தங்கிவிட்டார். பின்னர், இவர் “மலைக்கோவிலூர் சித்தர், சுப்பிரமணிய சுவாமி சித்தர் ” என்ற பல்வேறு பெயர்களில் மக்கள் அழைக்க தொடங்கி விட்டனர். நிர்வாணக் கோலத்தில் உடல் முழுவதும் விபூதியை பூசி காட்சி தருகிறார்.

இந்நிலையில் இன்று வெளி மாவட்டங்களில் இருந்து 5 சித்தர்கள் இன்று அவரை பார்ப்பதற்காக வந்துள்ளனர், அப்போது ஒருவர் மட்டும் கால்களை தூக்கிக் கொண்டு பூஜை செய்துள்ளார்.

இதனை அருகில் இருந்த பொதுமக்கள் பார்த்து அவரையும் வணங்கி நின்றனர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த மலைக்கோவிலூர் சித்தர் என்று அழைக்கப்படுபவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று ஒரு சிலர் கூறி வந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் இவரை தரிசனம் செய்வதற்காக உள் மாவட்டங்கள் மட்டுமல்லாது பல்வேறு வெளி மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்களும் கார் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்து தரிசனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக மலைக்கோவில் சித்தர் என்று அழைக்கப்படுபவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் இவரை சித்தராக வழிபடுகின்றனர் என்றும் ஒரு சிலர் மாவட்ட ஆட்சியரிடம் , காவல்துறையிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அக்கட தேசத்து நடிகையுடன் ஊர் சுற்றும் தனுஷ்.. வைரலாகும் வில்லங்கமான போட்டோஸ்!

பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…

13 minutes ago

எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்- பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை போட்டுடைத்த உதவி இயக்குனர்

கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…

16 minutes ago

கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

46 minutes ago

90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!

முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…

1 hour ago

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

2 hours ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

2 hours ago

This website uses cookies.