விழுப்புரம் : நகராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் அனைத்து வீடுகளுக்கும் சென்று வித்தியாசமான முறையில் உறுதிமொழிப் பத்திரத்தை கொடுத்து வாக்கு சேகரிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது இதனையொட்டி இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 41வது வார்டில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்குமார் என்பவர் இதுவரை அரசு அதிகாரிகளுக்கு மனு அளித்து அந்தப் பகுதிக்கு செய்த காரியங்களை படத்துடன் புத்தகம் வெளியிட்டு அதனை வாக்காளர் வீடுகளுக்குச் சென்று கொடுப்பதுடன் 20 ரூபாய் பத்திரத்தில் உறுதிமொழி உடன் கையொப்பமிட்டு கொடுத்து வருகின்றார்.
இதுவரை ஒவ்வொரு வேட்பாளரும் இனிமேல் செய்யப்போகும் காரியங்களை செய்வதாக கூறி மட்டுமே வாக்குகள் கேட்பார்கள். ஆனால் வித்தியாசமான முறையில் செய்ததை சுட்டிக்காட்டியும் இனிமேல் செய்யப் போவதையும் புத்தகமாக வெளியிட்டு உறுதிமொழி பத்திரத்துடன் வாக்காளர்களுக்கு கொடுத்து வாக்கு சேகரிப்பது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.