அந்த மனசு தான் சார்….தனது ஊழியர்களுக்கு புல்லட் பைக்கை தீபாவளி போனஸாக வழங்கிய உரிமையாளர்!!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டின் உரிமையாளர் தொழிலதிபர் சிவகுமார். இவர் தனது எஸ்டேட்டில் பணிபுரியும் 15 ஊழியர்களுக்கும் ஆளுக்கு ஒரு ராயல் என்ஃபீல்டு புல்லட் ஒன்றை இந்தத் தீபாவளி போனஸாக வழங்கி அசத்தியிருக்கிறார்.
இதில் டிரைவர் முதற்கொண்டு மேனேஜர் வரை எல்லோருக்குமே டூவீலர்களை போனஸாக வழங்கியிருக்கிறார். திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சிவகுமார், கோத்தகிரி பகுதிகளில் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறி மற்றும் கொய்மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்.
தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயங்களில் பரிசு கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தீபாவளி பரிசு தனது கார் டிரைவர் முதல் எஸ்டேட் மேனேஜர் வரை 15 பணியாளர்களைத் தேர்வு செய்திருக்கிறார்.
மேலும் அவர்கள் விரும்பும் வாகனங்களை அறிந்துகொண்டு, பணிபுரியும் தனது தொழிலாளர்களுக்கு 15 இரண்டு சக்கர வாகனங்களை புக் செய்திருக்கிறார்.
பின்னர் 15 தொழிலாளர்களையும் அழைத்து, வாகனத்தின் சாவியைக் கையில் வழங்கி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து இரண்டு சக்கர வாகனத்தை வழங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.