Categories: தமிழகம்

காதல் தோல்வியால் தங்கை தற்கொலை… மனமுடைந்த தந்தை உயிரிழப்பு ; காதலனை கொன்று பழிதீர்த்த சகோதரர் ; 2 பேர் கைது…!!

கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை மலை கிராமத்தில் தனது தங்கையின் தற்கொலைக்கு காரணமான வாலிபரை குத்திக் கொன்ற அண்ணன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை மலை கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் குணா என்ற குணால் (24). இவர் தனது உறவினர்கள் உடன் வெளியூரில் பைனான்ஸ் பணி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதே ஊரைச் சேர்ந்த விஜயராஜ் என்பவருடைய மகள் தாமரைச்செல்வி என்பவர் குணாலை காதலித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் குணால் தாமரைச்செல்வியின் காதலை ஏற்க மறுத்ததாகவும், இதனால் மணமுடைந்த தாமரைச்செல்வி கடந்த ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மகள் இறந்த துக்கத்தில் விஜயராஜனும் இறந்ததாக கூறப்படுகிறது.

தனது குடும்பத்தின் நிர்கதிக்கு காரணம் குணால் என்று விஜயராஜன் மகன் தர்ம மந்திரி (23) என்பவர் பலி வாங்கும் நோக்கத்துடன் இதே பகுதியில் இருந்துள்ளார். தனது குடும்பத்தில் தங்கை தாமரைச்செல்வி இறப்பிற்கும், தனது தந்தை விஜயராஜன் இறப்பிற்கும் குணால் தான் காரணம் என்று முன்விரோதம் கொண்டு, இவரை எப்படியாவது தீர்த்து கட்டி விட வேண்டும் என்று தர்ம மந்திரி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

பூம்பாறை பகுதியிலேயே வேலை செய்து வந்த தர்ம மந்திரி இதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் காளி என்பவர் உடன் பூம்பாறை கோவில் திருவிழா முடிந்தவுடன், குணாலை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். இதை அடுத்து, நேற்று இரவு தனது நண்பர்களுடன் நடந்து சென்ற குணாலை வழிமறித்த தர்ம மந்திரியும், இவரது நண்பர் காளியும் தகராறு செய்துள்ளனர்.

அப்போது தர்ம மந்திரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணாலை பல இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த குணால் சம்பவ இடத்திலேயே பலியானார். குணாலை குத்தி விட்டு தர்ம மந்திரியும், இவரது நண்பர் காளியும் தப்பி ஓடிவிட்டனர். இது பற்றி இறந்த குணாலின் தந்தை தியாகராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கத்தியால் குத்திக் கொன்றவர்களை தேடினர்.

தோட்டத்துப் பகுதியில் மறைந்திருந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து குணாலை குத்திக் கொன்ற தர்ம மந்திரி மற்றும் இவரது நண்பர் காளி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் தர்ம மந்திரி கூறியதாவது. கடந்த ஓராண்டிற்கு முன்பு தனது தங்கை தாமரைச்செல்வி குணாலை காதலித்து உள்ளார். தாமரைச்செல்வியின் காதலை குணால் ஏற்க மறுத்ததால் மனமுடைந்த தனது தங்கை விஷம் குடித்து இறந்ததாகவும், தனது தந்தை இந்த சோகத்தில் இறந்ததாகவும் தனது குடும்பமே நிர்மூலமானதற்கு குணால் தான் காரணம் என்ற காரணத்தினால் கடந்த ஓராண்டாக பழிவாங்க துடித்துக் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

அரசு தீட்டிய திட்டம்.. கைமாறும் 400 ஏக்கர் நிலம் : போராட்டத்தில் குதித்த மாணவர்கள் கைது!

ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…

11 minutes ago

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

15 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

16 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

16 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

17 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

17 hours ago

This website uses cookies.