தமிழகம்

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், வழக்கத்துக்கு மாறாக பொதுமக்கள் இருந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு மெரினா கடலுக்குள் சென்ற இரண்டு இளம்பெண்கள், விபரீத முடிவில் இறங்கியுள்ளனர். அப்போது, இதனைக் கண்ட அங்கு ரோந்துப் பணியில் இருந்த தலைமைக் காவலர் குமரேசன் மற்றும் காவலர்கள், உடனடியாக ஓடிச்சென்று இரண்டு இளம்பெண்களையும் காப்பாற்றி உள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், மீட்கப்பட்ட இருவரும் சகோதரிகள் ஆவர். இவர்கள் இருவரும் தங்களது பெற்றோருடன் தேனாம்பேட்டை பகுதியில் வசித்து வருகின்றனர். இதில், ஒரு பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், மற்றொருவர் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில், அவர்களுடைய பெற்றோருக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில், இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் சகோதரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளானர். இந்த நிலையில்தான், இளம்பெண்கள் இருவரும் விபரீத முடிவை எடுத்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

பின்னர், இதுகுறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வரவழைக்கப்பட்டனர். இதனையடுத்து, பெற்றோருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர். மேலும், சகோதரிகள் இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.

Hariharasudhan R

Recent Posts

பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. விரைவில் கைது? ரூ.5.90 கோடி பறிமுதல்!

ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…

27 minutes ago

வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை…ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…

1 hour ago

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

16 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

17 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

17 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

17 hours ago

This website uses cookies.