காரைக்குடியில் புத்தக வெளியீட்டு விழாவில் முதியவர் ஒருவர் பொன்னாடை அணிவிக்க வந்த போது, அதனை பிடுங்கி வீசிய நடிகர் சிவகுமாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் மற்றும் பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் திடீரென மேடையில் இருந்து பேசும்போது, குடிநீருக்காக போராடியது, உண்ணாவிரதம் இருந்தது குறித்து பேசி, பழ.கருப்பையாவின் காலில் விழுந்து வணங்கி மீண்டும் பேச ஆரம்பித்தார். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சி முடிவில் வயதான ரசிகர் ஒருவர், சிவகுமாருக்கு பொன்னாடையை அணிவித்து வாழ்த்து தெரிவிக்க முயன்றார். அப்பொழுது அதை தடுத்து நிறுத்திய சிவகுமார், பொன்னாடையை பிடுங்கி தூக்கி வீசி விட்டு சென்றார். இதனால் அந்த வயதான முதியவர் மனவேதனை அடைந்தார்.
ஏற்கனவே நடிகர் சிவகுமார் செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை பறித்து வீசியது சர்ச்சையானது. அப்போது, செல்போனின் ஃபிளாஷ் லைட் கண்ணில் பட்டால் என்னாகும் என்று கூறி, தனது தந்தையின் செயலை அவரது மகனும், நடிகருமான கார்த்தி நியாயப்படுத்தி பேசியிருந்தார். தற்போது, சால்வை அணிய வந்தவரை நோகடிக்கும் விதமாக, நடிகர் சிவகுமார் நடந்து கொண்டது நியாயமா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.