சிவகங்கை : வழக்கறிஞர்களாக பணிபுரியும் கணவன் மனைவியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் என்பவரின் மகன் குமரகுரு. இவரது மனைவி வித்யா ஸ்ரீ. கணவன், மனைவி இருவரும் காரைக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகின்றனர். இவரது வீட்டின் எதிர் வீட்டில் வசிப்பவர் கணபதி என்பவருக்கும், குமரகுருவுக்கும் வழக்கு ஒன்றில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கணபதி மற்றும் அவரது நண்பர்கள் இருவர் குமரகுரு வீட்டிற்குள் புகுந்து குமரகுரு மற்றும் அவரது மனைவி இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த சம்பவத்தை பார்த்த அவ்வழியாகச் சென்ற மாரி என்பவர் தடுக்க முயன்ற போது அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து உயிருக்கு போராடிய மூவரையும் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். மேலும் தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.