சிவகங்கையில் சமுக ஆர்வலரை செல்போனில் ஆபாசமாக மிரட்டிய மாவட்ட ஆட்சியரின் உதவியாளரின் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைகிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். சமூக ஆர்வலரான இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் குறித்த விவரங்களையும், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் குறித்த விவரங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
இதில் அதிகாரிகள் வழங்கிய விவரங்கள் திருப்தி இல்லாததால், தகவல் ஆணையரிடம் மேல் முறையீடு செய்துள்ளார். இதனையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதரன் ரெட்டியின் உதவியாளர் சங்கர காமேஸ்வரன், சமுக ஆர்வலர் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு ஏன் தேவையில்லாத விளக்கங்களை கேட்கின்றாய் என ஒருமையில் தகாத வார்த்தைகளை கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் மன உளச்சலுக்கு ஆலான ராதாகிருஷ்ணன், இது குறித்த சாலைகிராமம் காவல் நிலையத்தில் சங்கர காமேஸ்வரன் பேசிய செல்போன் ஆடியோ பதிவுடன் புகார் மனு அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்வதாக கூறியுள்ளனர்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விளக்கம் கேட்டதற்காக சமுக ஆர்வலரை, ஆட்சியரின் உதவியாளர் மிரட்டிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், பொது மக்களுக்கு பிரச்சினை என்றால் அரசு அதிகாரிகளிடம் முறையிட்டு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை இச்சம்பவம் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.