காரைக்குடியில் வீட்டில் குடியிருந்த வரை காலி செய்யச் சொன்ன உரிமையாளரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயற்சிப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதி செல்லப்பா நகரில் வசித்து வருபவர் சரவணன். வீட்டின் மாடியை தேவி என்பவருக்கு மூன்று லட்ச ரூபாய் ஒத்திக்கு விட்டுள்ளார். ஒத்தி காலம் முடிந்ததும் மூன்று லட்ச ரூபாயை திரும்ப கொடுத்து சரவணன் வீட்டை காலி செய்யச் சொல்லியுள்ளார். ஆனால் தேவி வீட்டை காலி செய்ய மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தேவி தனது உறவினரான குமார் என்பவருக்கு போனில் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடம் வந்த குமார், கையோடு கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து சரவணனை வெட்ட முயன்றுள்ளார்.
சரவணன் கீழே விழுந்து தப்பித்த நிலையில் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்ய முயற்சித்து தப்பியோடிய குமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த தேவியை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.