காரைக்குடியில் வீட்டில் குடியிருந்த வரை காலி செய்யச் சொன்ன உரிமையாளரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயற்சிப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதி செல்லப்பா நகரில் வசித்து வருபவர் சரவணன். வீட்டின் மாடியை தேவி என்பவருக்கு மூன்று லட்ச ரூபாய் ஒத்திக்கு விட்டுள்ளார். ஒத்தி காலம் முடிந்ததும் மூன்று லட்ச ரூபாயை திரும்ப கொடுத்து சரவணன் வீட்டை காலி செய்யச் சொல்லியுள்ளார். ஆனால் தேவி வீட்டை காலி செய்ய மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தேவி தனது உறவினரான குமார் என்பவருக்கு போனில் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடம் வந்த குமார், கையோடு கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து சரவணனை வெட்ட முயன்றுள்ளார்.
சரவணன் கீழே விழுந்து தப்பித்த நிலையில் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்ய முயற்சித்து தப்பியோடிய குமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த தேவியை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…
தமிழ் சினிமாவில் நாட்புற பாட்டை பாடி புகழ்பெற்றவர் சின்னபொண்ணு. இவர் நாட்டுப்புற பாட்டையே அடிமாற்றாமல் சினிமாவிலும் தனது பாணியை அப்படியே…
This website uses cookies.