சிவகாசி அருகே அரசு பள்ளியில் வகுப்பறையில் வைத்து ஆசிரியரை 11ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே திருத்தங்கல் எஸ்.ஆர்.என் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பபு மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பொருளாதார துறை ஆசிரியராக பணிபுரிபவர் சாமி நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கடற்கரை (42). இந்நிலையில் அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில் தேர்வுக்கு தயாராகும் வகையில், சிறப்பாக படிக்க சொல்லி மாணவ, மாணவியரிடையே கண்டிப்புடன் ஆசிரியர் கடற்கரை நடந்து கொண்டதாக தெரிகிறது.
இதையடுத்து, காலை நேர இடைவேளை நேரத்தில் வீட்டிற்குச் சென்ற அதே வகுப்பைச் சேர்ந்த முகேஷ் மற்றும் யோகேஷ் ஆகிய இரு மாணவர்களும், அங்கிருந்து கத்தி மற்றும் அருவாளுடன் பள்ளிக்கு வந்து அங்கு ஓய்வறையில் இருந்த ஆசிரியர் கடற்கரையை பின்பக்க தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடினர். இதனால், பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. தலையில் காயம் அடைந்த ஆசிரியர் கடற்கரை திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இந்த இரு மாணவர்களும் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்து தனித்தேர்வு எழுதிவிட்டு மீண்டும் 11ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து சிவகாசி டிஎஸ்பி தனஞ்ஜெயன் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
மேலும் நான்கு தனிப்படை அமைத்து ஆசிரியரை வெட்டிச் சென்ற மாணவர்களை தேடி வந்த நிலையில் பெரியார் காலனி பகுதியில் முட்புதரில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்தனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.