தமிழகம்

தீர்த்தம் குடித்த சாமியார் உள்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதி.. திகிலூட்டும் பின்னணி!

விழுப்புரத்தில், கடன் தொல்லையால் தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், தனது நண்பரின் குடும்பத்தையும் கொல்ல முயன்ற சாமியார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

விழுப்புரம்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி (45). இவர் அருள்வாக்கு கூறி வந்து உள்ளார். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகில் உள்ள அம்மகளத்தூர் என்ற கிராமத்திற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (61) என்பவருக்கும், முரளிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நல்ல நண்பர்களாகி உள்ளனர். இதனால், கணேசன் வீட்டிலேயே முரளி பல வருடங்களாக வசித்து வந்துள்ளார். அது மட்டுமல்லாமல், கிராமத்தில் உள்ள மக்களுக்கும் குறிசொல்லி வந்துள்ளார். இவரது உதவியாளராக ராமமூர்த்தி (32) என்பவர் இருந்துள்ளார்.

இந்த நிலையில், கோயில் செலவுக்குப் பணம் தேவைப்படுவதாகக் கூறி, அப்பகுதி மக்களிடம் பல லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழல் ஏற்படவே, முரளியிடம் கடன் கொடுத்தவர்கள் திரும்பக் கேட்டு வந்து உள்ளார்.

இதனால், முரளி தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதன்படி, மார்கழி வெள்ளியான நேற்று அதிகாலை, குடியிருப்பு அருகில் உள்ள கோயிலில் பூஜை செய்துவிட்டு வீடு திரும்பிய முரளி, ஏற்கனவே வாங்கி மறைத்து வைத்திருந்த விஷத்தன்மை கொண்ட பவுடரை தண்ணீரில் கலந்து முதலில் தானே குடித்துள்ளார்.

பின்னர் அதனை சாமி தீர்த்தம் எனக் கூறி உதவியாளர் ராமமூர்த்தி, நண்பர் கணேசன், அவரது மனைவி ராஜாம்மாள் (60), மகன்கள் முத்தையன் (40) மற்றும் கண்ணன் (32) ஆகிய 5 பேரையும் எழுப்பி குடிக்க கொடுத்துள்ளார். அவர்களும் தீர்த்தம் என நம்பி குடித்துள்ளனர்.

பின்னர் 6 பேரும் அடுத்தடுத்து மயங்கி உள்ளனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இதையும் படிங்க: மேல்மருத்துவத்தூர் செல்லும்போது மின்சாரம் பாய்ந்து இளம் பக்தை பலி.. ஆற்காடு அருகே சோகம்!

அங்கு 6 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீசார், முரளியிடம் விசாரணை நடத்தினர். நடந்ததைக் கூறிய முரளி, கடன் தொடர்பாக தனது உதவியாளர், நண்பர் கணேசனின் குடும்பத்தினரையும் கடன்காரர்கள் தொல்லை செய்வார்கள் என்பதால், அவர்களுக்கும் விஷம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்து உள்ளார்.

இதனையடுத்து, முரளி மீது கொலை முயற்சி (307) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதேநேரம், விஷம் குடித்தவர்களில் 4 பேர் அபாய நிலையை கடந்துவிட்டதாகவும், மற்ற 2 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

14 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

15 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

16 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

16 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

16 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

16 hours ago

This website uses cookies.