கோவை : நள்ளிரவில் உறங்கும் காவல் துறையின் ரோந்து பணியால் வாகன திருட்டு பீதியில் உறங்காமல் வாகன உரிமையாளர்கள் தவிக்கின்றனர்.
கோவையில் நள்ளிரவில் வாகனம் திருடும் கொள்ளையர்கள் அதிகரித்திருக்கின்றனர். போலீசாருக்கு வருகின்ற புகாரில் வாகன திருட்டு புகார் இல்லாத நாளே இல்லை. திருட பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள் போல நோட்டமிட்டு வண்டியை லாவகமாக திருடி செல்கின்றனர்.
குழுவாக வந்து வண்டி சைட் லாக்கை உடைத்து மற்றொரு திருட்டு நண்பரின் உதவியுடன் டோ செய்து லாவகமாக திருடி செல்கின்றனர். வாசலில் நிறுத்தப்பட்டிருக்கின்ற வாகனத்தை சைட் லாக்கை உடைத்து வண்டியை சாவி இன்றி வையர் மூலமாக இயக்கி அசால்ட்டாக திருடி செல்கின்றனர்.
கள்ள சாவியிலும் வாகனத்தை திருட்டு கும்பல் திருடி செல்கின்றனர். அதனடிப்படையில் கோயமுத்தூரில் இந்த மாதம் மட்டும் மர்ம நபர்களின் கைவரிசையால் 100க்கும் மேற்ப்பட்ட வாகனங்கள் திருடப்பட்டதாக புகார் தரப்பட்டன.
ஃபுரபசனல் திருடர்கள் ஊடுருவி விட்டனரா என்ற கேள்வி எழுகின்ற வகையில் வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவது வாகன உரிமையாளர்களை பீதியில் ஆழ்த்தியிருக்கின்றன.
எனவே இரவு நேரங்களில் போலிஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளன. உறக்கத்தை கெடுத்த இந்த ஃபுரபசனல் திருடர்களின் கொட்டத்தை அடக்க உறங்காமல் போலிஸ் ரோந்து பணியை மேற்க்கொள்வார்களா என்பது வாகன உரிமையாளர்களின் கேள்வியாக இருக்கின்றன.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.