கோவை: கோவையில் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து விலை உயர்ந்த டிவி மற்றும் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாதம்பட்டி அருகே தனியார் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் உள்ளே இருந்த விலை உயர்த்த டிவி, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
கோவை மாதம்பட்டி அடுத்த செல்லப்பகவுண்டர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் ஹரிபிரசாத், கோவையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறது. இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சென்னை தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது சுந்தரமும் தனது மகள் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் இவர்களது வீட்டின் முன்கதவு திறந்திருப்பதாக பக்கத்து வீட்டுக்காரர் ஹரிபிரசாத்துக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து மாலை வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் கலைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டிலிருந்த சோனி டிவி மற்றும் 2 பவுன் நகை 15 ஆயிரம் ரொக்கம் பணம் திருட்டு போனது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தடயவியல் துறையினர் பீரோ கதவு போன்ற இடங்களில் ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.