தூத்துக்குடி ; ஓட்டப்பிடாரம் அருகே எஸ்.குமாரபுரத்தில் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் பாம்புகளை வைத்து வித்தை காட்டிய நபரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஓட்டப்பிடாரம் அருகே எஸ்.குமாரபுரத்தில் கடந்த ஜூலை 7 அன்று ஸ்ரீகாளியம்மன் கோவில் கொடை விழாவினை முன்னிட்டு ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில், கலைஞர் ஒருவர் பாம்புகளை வைத்து வித்தைகள் காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் வன அலுவலர்களுக்கு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து தூத்துக்குடி வனச்சரக அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில், ஓட்டப்பிடாரம் வனவர் மகேஷ், வனக்காப்பாளர் பேச்சிமுத்து, வன காவலர் லட்சுமணன் ஆகியோர் கோவில் திருவிழா நடந்த வன அலுவலர்கள் எஸ் குமாராபுரத்தில் உள்ள கோவில் கமிட்டி நிர்வாகிகளிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில் மதுரை ஆளவந்தான் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் மகன் ராஜேஷ் குமார் (46) என தெரிய வந்தது. இதை அடுத்து வனத்துறையினர் ராஜேஷ்குமாரை கைது செய்து, தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர் செய்து பேரூரணி சிறையில் அடைத்தனர்.
மேலும், கலை நிகழ்ச்சிகளில் பாம்புகளை வைத்து வித்தை காட்டிய பிறகு மீண்டும் காட்டுப் பகுதிக்குள் பாம்புகளை விட்டு விடுவதாக ராஜேஷ் குமார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.