கோவை கணுவாய் பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடி வீரரான 35 வயது மதிக்கத்தக்க முரளிதரன். இவருக்கு மனைவி, பள்ளி படிக்கும் ஒரு மகன் மற்றும் கல்லூரி படிக்கும் மகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு காளப்பநாயக்கன் பாளையத்தில் பகுதியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் பாம்பு புகுந்ததாக வந்த தொலைபேசியில் தகவல் வந்ததை தொடர்ந்து, அங்கு உடனே சென்று அவர் பார்த்த போது அங்கு இருந்த மேஜை அடியில் சுமார் மூன்று அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் இனத்தைச் சேர்ந்த அதிக விஷம் கொண்ட பாம்பு என தெரிய வந்தது.
அந்தப் பாம்பை லாவகமாக வாலைப் பிடித்து தூக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அவரை கடித்து உள்ளது. அதனை பைக்குள் பிடித்து தூக்கி செல்ல முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து உள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் இது குறித்து 108 ஆம்புலன்ஸ், வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அந்தப் பாம்பு கடித்த இடத்தில் ரத்தத்தை வெளியேற்றி உள்ளார். இருந்த போதும் பாம்பு கடித்து ஐந்து நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திலே உயிரிழந்து உள்ளார்.
அங்கு வந்த வனத்துறை மற்றும் துடியலூர் காவல் துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
This website uses cookies.