சமூக வலைத்தளத்தில் (Twitter) தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களை பற்றி அவதூறு வீடியோ பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களை பற்றி கவிஞர் வைரமுத்து அவர்களின் குரலில் பேசுவது போன்று தவறாக சித்தரித்து அவதூறு பரப்பும் வகையிலான வீடியோ X வலைத்தளத்தில் drsenthil என்ற twitter பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தி.மு.க மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து, புகார் தொடர்பாக திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல்ஆய்வாளர் தகழனியப்பன், தலைமையில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் தகணபதி ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
சர்சைக்குரிய பதிவு தொடர்பாக twitter வலைத்தளபக்கம் ஆய்வு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய பதிவினை பதிவிட்டவர் தஞ்சாவூர் மாவட்டம், திருகாட்டுப்பள்ளி, தெற்குவாடியகாடை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் மகன் செந்தில்நாதன் என்பதும் இவர் BE Computer Science படித்துவிட்டு பெங்களூரில் உள்ள L&T Technology Services (LTTS) என்ற தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
தொடந்து அவரின் சமூகவலைதள பக்கங்களை ஆய்வு செய்ததில் இவர் சமூகவலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிடுபவர் என்பது தெரியவந்ததை, தொடர்ந்து செந்தில்நாதனை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.
விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…
நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
This website uses cookies.