காரைக்கால் அருகே நடைபெற்ற வாயோடு வாய் வைத்து திராட்சை ஊட்டும் நூதன போட்டியில் தம்பதிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை ஒட்டி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இவ்வாண்டும் பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறுவர்களுக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் என தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு குடும்ப தலைவி மற்றும் குடும்ப தலைவர்களுக்கான சிறப்பு போட்டி நடத்தப்பட்டது. இதில் குடும்ப தலைவருக்கு மட்டும் நெற்றியில் கோலை வைத்துக்கொண்டு தரையில் வட்டமிடுதல் போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று கோல் சுற்றிய ஏராளமான ஆண்கள் விழுந்து எழுந்து சென்ற காட்சி கலகலப்பை ஏற்படுத்தியது.
இதேபோல், குடும்பத் தலைவர் மற்றும் குடும்பத் தலைவிக்கு நடத்தப்பட்ட நூதன போட்டி அனைவரையும் கைதட்டி ஆரவாரம் செய்ய வைத்தது. கைப்படாமல் கணவன்மார்கள், மனைவிமார்களுக்கு திராட்சை ஊட்ட வேண்டும் என்பது போட்டியின் விதி.
சிறிய குச்சியில் குத்தப்பட்டுள்ள திராட்சையை வாயில் கவ்வி ஓடும் கணவன்மார்கள் மனைவிக்கு வாய் வழியே ஊட்டி போட்டி சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்த போட்டிக்கு பலரும் ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்பு கொடுத்தனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.