குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு நீர்நிலைகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து கேரள, பாலக்காடு மாவட்ட சோலையார் கிராம் பஞ்சாயத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் கேரளாவில் பருவமழை பொய்த்ததன் காரணத்தாலும், வெயிலின் தாக்கத்தாலும் நீர் நிலைகள் வேகமாக வற்றி வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக – கேரள எல்லையை ஒட்டி உள்ள கோவை மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை, பில்லூர் அணை வற்றத் தொடங்கி உள்ளதால் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது.
மேலும் படிக்க: கருணாநிதியை மேடையிலேயே எதிர்த்தவர் நடிகர் அஜித்… எனக்கும், அஜித்துக்கும் ஒரே வேவ் லென்த் ; ஜெயக்குமார் சொன்ன REASON..!!!
இந்நிலையில் தமிழகத்தில் கோவை உள்பட 15 மாவட்டங்களில் வெப்ப அலையுடன் கடுமையான வெயில் இருக்கும் என கூறிய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தை ஒட்டி உள்ள கேரளா, ஆணைகட்டி பகுதி மற்றும் அட்டப்பாடி இடையே உள்ள சோலையார் கிராம் பஞ்சாயத்து சார்பில், பொது நீராதாரங்களில் ஏற்பட்டு வரும் வறட்சி மற்றும் தண்ணீர் தடுப்பாட்டை கருத்தில் கொண்டு, நீரோடைகள், குளங்களில் மாசு ஏற்படுத்தும் வகையில் குளிப்பது, துணி துவைக்க தடை விதித்து உள்ளது.
மேலும், இது போன்ற செயல்களில் அத்து மீறுபவர்கள் மீது கேரள பஞ்சாயத்து ராஜ் சட்டம் 219(S)ன் கீழ் ரூ.50000 அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் விதிக்கபடும் என தெரிவித்துள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.