தமிழகம்

’நான் அப்பாவக் கொன்னுட்டேன்’.. ஆட்டோ ஓட்டுநரால் வெளியான பகீர் சம்பவம்!

சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை: சென்னை அடுத்த நங்கநல்லூர் தில்லை கங்கா நகரைச் சேர்ந்தவர்கள் முரளிதரன் (65) – ரோகிணி தம்பதி. இவர்களுக்கு பிரசன்னா வெங்கடேசன் (30) மற்றும் ஆதித்ய நாராயணன் (28) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில், தந்தை முரளிதரன் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், இளைய மகன் ஆதித்ய நாராயணனுக்கு சற்று மன நல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இருப்பினும், அடிக்கடி பணம் கேட்டு தந்தையிடம் தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் தந்தை – மகனிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தந்தை – மகனுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த ஆதித்ய நாராயணன், கத்திரிக்கோலால் தந்தையின் கழுத்தில் குத்தியதில் முரளிதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர், ஆதித்ய நாராயணன் ரத்தக் கறை படித்த உடையுடன், தாய் ரோகிணியை அழைத்துக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர் ஒருவரைச் சந்திக்க, அதே பகுதி வழியாகச் சென்ற ஆட்டோவை மறித்து ஏறியுள்ளார்.

இவ்வாறு தாயும், மகனும் பதற்றத்துடன் இருப்பதைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் அப்துல் மாலிக்குக்கு (25) சந்தேகம் ஏற்பட்டுள்ளது.மேலும், திருவல்லிக்கேணி அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, ஆதித்ய நாராயணன் தனது சகோதரரை போனில் அழைத்து, “தந்தையைக் கொலை செய்து விட்டேன். நீ சென்று பார்த்து இறுதிச் சடங்கை முடித்துவிடு” எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுநர் அப்துல் மாலிக், நேராக ஆட்டோவை திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்குள் ஒட்டிச் சென்றுள்ளார்.அங்கு ஆதித்ய நாராயணன் மற்றும் அவரது தாயை போலீஸசாரிடம் ஒப்படைத்துவிட்டு, நடந்த விவரத்தை கூறியுள்ளார். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், ஆதித்ய நாராயணன் அவரது தந்தையைக் கொலை செய்துவிட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: தேவையில்லாத கேள்வியை கேட்காதீங்க.. நிருபர்களிடம் இளையராஜா ஆவேசம்!

இதனையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார் ஆதம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.மேலும், ஆட்டோ ஓட்டுநரையும் போலீசார் வெகுவாகப் பாராட்டினார். இதனைத் தொடர்ந்து, ஆதம்பாக்கம் போலீசார் முரளிதரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Hariharasudhan R

Recent Posts

ரஜினி கூட டான்ஸ்.. சகுனி வேலை பார்த்த நயன்தாரா : நடிகை வருத்தம்!!

சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுடன் ஒரு பாட்டில் ஆவது தலையை காட்டி விட வேண்டும் என சக நடிகைகள் விரும்புவது…

12 minutes ago

14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்.. சினிமா பாணியில் தாலி கட்டிய நபர் செய்த காரியம்.!(வீடியோ)

ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின்…

41 minutes ago

20 ஆண்டுகளாக சம்பளம் இல்லை…பாலிவுட்டில் அசத்தும் பிரபல நடிகர்.!

அமீர்கானின் நெகிழ்ச்சி செயல் இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான்,எப்போதும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு,தனது படங்களின் வெற்றிக்காக புதுமையான…

42 minutes ago

ஒரே ஆடையில் ஓராண்டில் 30 பயணங்கள்.. ரன்யா ராவ் சிக்கியது எப்படி? விசாரணை வலையில் Ex DGP!

தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு: கடந்த மார்ச்…

57 minutes ago

வாய்க்கால் தகராறு.. ஜாமீனில் வந்த பாஜக நிர்வாகி மீண்டும் கைது!

விளைநிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மிரட்டல் விடுத்ததாக பிரபல ரவுடி படப்பை குணா கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம்:…

2 hours ago

This website uses cookies.