விருதுநகர், சிவகாசியில் குடும்பத் தகராறில் மாமியாரை குத்திக் கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர்: ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூரைச் சேர்ந்தவர் காளிதாஸ் (27). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது, அதே ஆலையில் அவருடன் பணியாற்றிய சிவகாசி, விஸ்வநத்தம் காமராஜர் காலனியைச் சேர்ந்த மாரீஸ்வரியை காதலித்துள்ளார்.
பின்னர், இருவரும் திருமணம் செய்துகொண்டு மதுரை காளவாசல் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காளிதாசுக்கும், மாரீஸ்வரிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தனது தாய் வீட்டிற்கு வந்த மாரீசுவரி, தனது தாயார் வீரமணியுடன், சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலைக்கு வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று பிற்பகல் சிவகாசிக்கு வந்த காளிதாஸ், தனது மனைவியிடம் சமாதானம் பேசி அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். அப்போது மாரீஸ்வரிக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த காளிதாஸ், தனது மாமியார் வீரமணியை கத்தியால் குத்தி உள்ளார்.
பின்னர், அச்சத்தில் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மேலும், இதில் படுகாயம் அடைந்த வீரமணி உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதன் முதற்கட்ட விசாரணையில், சிவகாசியில் இருந்து மதுரை சென்ற பேருந்தில் காளிதாஸ் தப்பிச் சென்றது தெரிந்துள்ளது.
இதையும் படிங்க: கிரிப்டோகரன்சி விசாரணையில் தமன்னா, காஜல் அகர்வால்? புதுச்சேரியில் சிக்கியது எப்படி?
இதனையடுத்து, உடனடியாக அந்தப் பேருந்தை பெருங்குடி சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தி, அதில் இருந்த காளிதாசை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொலைச் சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.