தமிழகம்

விஜயகாந்த் பட பாணியில் கொலை.. தாய், மருமகள் சேர்ந்து மகனைக் கொன்ற கொடூரம்!

திருச்சியில் குடித்துவிட்டு துன்புறுத்தி வந்த மகனை, தாயும், மருமகளும் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி: திருச்சி சஞ்சீவி நகர், வாடாமல்லி தெருவைச் சேர்ந்தவர் குணா என்கிற குணசேகரன் (34). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு சுலோச்சனா என்பவர் உடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மதுபோதைக்கும், கஞ்சாவுக்கும் அடிமையான குணசேகரன், தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவி மற்றும் தாய் காமாட்சி ஆகியோரிடம் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று (நவ.21) தாய் காமாட்சி, தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து உள்ளார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குணசேகரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, பிரேதப் பரிசோதனை முடிவு வெளியாகி, போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

காரணம், அது தற்கொலை அல்ல, கொலை என தெரிய வந்தது. பின்னர், குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், குணாவின் வீட்டுக்கு எதிரில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் சோதனை செய்து உள்ளனர். அதில், சம்பவம் நடந்த அன்று இரவு குணாவின் வீட்டுக்குள் 3 பேர் சென்று வருவதும், வீட்டின் வெளியில் தாய் மற்றும் மனைவி அமர்ந்து இருப்பதும் தெரிய வந்தது.

பின்னர், தாய் மற்றும் மனைவியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், சம்பவம் நடந்த நாள் அன்று, வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த குணா, தாய் மற்றும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அதன் பிறகு, அவர் வீட்டிற்குள் சென்று தூங்கி உள்ளார்.

அப்போது, தாய் காமாட்சியின் உறவினர்களான திருநங்கை விக்கி என்ற லித்தின்யா ஸ்ரீ (19), திருநங்கை குபேந்திரன் என்ற நிபுயா (19) மற்றும் விஜயகுமார் (48) ஆகிய மூவரும் குணசேகரனின் வீட்டுக்கு வந்து உள்ளனர். இதனையடுத்து, வீட்டில் இருந்த காமாட்சியும், சுலோச்சனாவும் வீட்டிற்கு வெளியில் வந்து அமர்ந்து, யாரும் வராமல் பார்த்து உள்ளனர்.

இதையும் படிங்க: ’பெத்த அப்பன்தானே விட்ரலாமா..’ தாய் கதறிச் சொன்ன ‘அந்த’ வார்த்தை.. போலீசார் அலட்சியமா?

இதனிடையே, உள்ளே சென்ற மூவரும், விஜயகாந்த் நடித்த ராஜ்ஜியம் என்ற படத்தில் வருவது போல, குணசேகரனின் உடலில் காலி ஊசியைச் செலுத்தி உள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து துப்பட்டாவால் குணசேகரனின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து, உடலை தற்கொலை செய்வது போன்று செட்டப் செய்து உள்ளது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இதனை கொலை வழக்காகப் பதிவு செய்த கோட்டை காவல் நிலைய போலீசார், காமாட்சி, சுலோச்சனா, விக்கி என்ற லித்தின்யா ஸ்ரீ , குபேந்திரன் என்ற நிபுயா மற்றும் விஜயகுமார் ஆகிய 5 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Hariharasudhan R

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

1 day ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

1 day ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

2 days ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

2 days ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

2 days ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

2 days ago

This website uses cookies.