Categories: தமிழகம்

காதல் திருமணம் செய்த மகன்.. பெண் வீட்டார் துன்புறுத்தலால் தாய் தற்கொலை.. உதவாத போலீசார்!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருப்பண்ண மேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரின் தங்கை மல்லிகாவிற்கு ஹரி பிரசாத் என்ற மகனும் ரேணுகாதேவி என்ற மகளும் உள்ளனர்.

ஹரிபிரசாத் அதே ஊரைச் சேர்ந்த மனோரஞ்சனி என்கிற அபி என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதை பெண் வீட்டார் கண்டித்தும் வந்துள்ளனர். இதனால் ஹரி பிரசாத் கரூர் டெக்ஸ் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

இதனால் மல்லிகா மற்றும் அவரது உறவினர் மூலம் கடந்த 03ம் தேதி குளித்தலை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார் எனினும் குளித்தலை காவல் துறையினர் எதிர்தாரருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது

அதன் பிறகு கடந்த 5ஆம் தேதி அன்று ஹரிபிரசாத் அபியும் காதல் திருமணம் செய்து கொண்டு திருப்பூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அபி குடும்பத்தார் அன்று முதல் ஹரி பிரசாத் வீட்டிற்கு சென்று அங்கிருந்த மல்லிகா மற்றும் அவரது கணவர் ராஜு ஆகிய இருவரையும் அடிக்கடி தகராறு செய்து அச்சுறுத்தி மிரட்டி வந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி அன்று வீட்டில் இருந்த மல்லிகாவை, அபியின் குடும்பத்தார்கள் கன்னியம்மாள், ஜோதி, பிரேமா, சிரும்பாயி, லட்சுமி மற்றும் சிலருடன் சென்று நீங்கள் செத்தால் உன் மகன் இங்கே வருவான் என மல்லிகாவை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து மல்லிகா தம்பி பழனிச்சாமி அவசர எண் 100க்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுவரை எந்த போலீசாரும் வீட்டில் வந்து விசாரணையோ பாதுகாப்போ கொடுக்கவில்லை என மல்லிகா தம்பி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அன்று முதல் மன வேதனையில் இருந்த மல்லிகா இன்று காலை 11 மணியளவில் வீட்டில் தனக்குத்தானே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதை அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மல்லிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மல்லிகா தற்கொலைக்கு குளித்தலை காவல்துறையினர் முக்கிய காரணம் என மல்லிகா உறவினர்கள் திரண்டு வந்து குளித்தலை காவல் நிலையத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!

புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…

32 minutes ago

நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…

35 minutes ago

கணவர் வீட்டை விட்டு போக முடியாது : புதுச்சேரியை விட்டு செல்ல மறுக்கும் பாக்., பெண்!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…

1 hour ago

தேர்தல் நேரத்தில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. திமுக எம்பிக்கு கோர்ட் பரபர உத்தரவு!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…

2 hours ago

நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…

2 hours ago

இளையராஜா செஞ்சது சரியா?- கெத்து தினேஷுக்கு இவ்வளவு கெத்தா? என்னப்பா இது?

இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…

2 hours ago

This website uses cookies.