விழுப்புரம் : கண்டாச்சிபுரம் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை தந்தை இறந்த சோகத்தில் மூன்றாவது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேல்வாலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அர்ஜுனன் (வயது 55). இவரது மனைவி சரசு (வயது 50). இந்த தம்பதிகளுக்கு அனிதா என்ற மகளும் பாலாஜி,மற்றும் உதயகுமார் ( 25)என்ற 2 மகன் உள்ளனர்.
இந்நிலையில் அர்ஜுனன் குடித்துவிட்டு வருவதால் அவரது மனைவி சரசு ஆகிய இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அதேபோல் நேற்று நள்ளிரவில் குடித்துவிட்டு வந்த அர்ஜுனனை அவரது மனைவி சரசு திட்டி உள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. குடிபோதையில் சென்று அர்ஜுனன் வீட்டின் பின் பக்கம் உள்ள பூசமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த மூன்றாவது மகன் உதயகுமார் தந்தை இறந்த துக்கம் தாங்காமல் அதிகாலையில் அவரது விவசாய நிலத்தில் சென்று பூசமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தந்தை இறந்த சோகத்தில் மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் இறந்த உடல்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.