விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கடல் நீர் குடிநீராகக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க கடல் நீரை குடிநீராக்கி வழங்கும் ரூ.1502.72 கோடி மதிப்பீட்டிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டப்பட்டு, ஆரம்ப கட்ட பணிகள் துவக்கப்பட்டன.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இத்திட்டத்தை அரசு கைவிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு தேவையான நிதியை விடுவிக்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தி சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் பெற்று வருகிறது.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, அர்ஜுனன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்று உள்ளனர்.
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
This website uses cookies.