ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த தாயை மதுபோதையில் கற்பழித்து கொன்ற முன்னாள் காவலரை ஆற்காடு கிராமிய போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் காவலர் தினேஷ்(32). பிரியங்கா என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழும் நிலையில், கடந்த ஆண்டு நன்னடத்தை இல்லாத காரணத்தினால் காவல்துறையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் சொந்த ஊரில் வசித்து வந்த போது மது அருந்திவிட்டு தனது தாயிடம் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தாய் கடந்த இரு தினங்களாக செல்போன் பேசாததால் தான் சந்தேகமடைந்த மகள் பிரியா, சந்தேகமடைந்து வீட்டில் சென்று பார்த்த போது தாய் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆற்காடு கிராமிய போலீசார், உயிரிழந்த வாணிஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வீட்டில் தனியாக இருந்த முன்னாள் காவலரான மகன் தினேஷை கைது செய்து விசாரணைக்காக ஆற்காடு கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், தனது தாயை மது போதையில் கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்ட தினேஷ் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மது போதையில் தாய் என்றும் பாராமல் போதையின் உச்சத்தில் கற்பழித்து மகனே கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலமுறை தனது தாயிடம் மனைவியை சேர்த்து வைக்க சொல்லி சண்டையிட்டு வந்த நிலையில் மனைவியுடன் சேர்த்து வைக்காத வருத்தத்தில் மகன் மது போதையில் தாயை கற்பழித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.