தமிழில் பல வருடங்களுக்கு முன் காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமான சோனியா அகர்வால் , தொடர்ந்து செல்வராகவனின் படத்தில் மட்டுமே சோனியா நடித்து வந்தார். செல்வா எடுத்த 7G ரெயின்போ காலனி படமும் பெரிய ஹிட் அடித்தது.
அந்த படத்தின் மூலம் தமிழில் பலருக்கு பேவரைட் நடிகையாக சோனியா அகர்வால் ஆனார். ஆனால் போக போக அந்த சோனியாவிற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. பின், சோனியா செல்வராகவனை கடைசியில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணமும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அவரை விவாகரத்து செய்துவிட்டு, சோனியா தனியாள் ஆனார்.
தமிழ் மட்டுமல்லாமல், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். தற்போது, சீரியல்களிலும் நடித்து வருகிறார் அம்மணி. இந்நிலையில், தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், சோனியா அகர்வால் செல்வராகவன் குறித்தும், தனுஷ் குறித்துமான தனது பார்வையை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
செல்வராகவன் நடிப்பில் எனக்கும் தனுஷுக்கும் குரு. அவர் எனக்கு சிறந்த குரு , ரொம்ப கடுமையான குருவும் கூட. காதல் கொண்டேன் திரைப்படத்தில்தான் எனக்கு கெரியர் ஸ்டார்ட் ஆச்சு. தனுஷ் முன்பே ஒரு படம் பண்ணியிருந்தார்..
முதன் முதலாக தனுஷை செட்டில் பார்த்துவிட்டு என் அம்மா கேட்டாங்க, இவர்தான் ஹீரோவா அப்படினு. அதன் பிறகு அம்மா என்னிடம் வந்து , நாம நல்ல முடிவுதான் எடுத்திருக்கோமா? இந்த படம் உன் அறிமுகப்படமாச்சே அப்படினு புலம்பினாங்க. அதன் பிறகு நான் அம்மாவை சமாதானப்படுத்தினேன். அம்மா சில ஸ்கிரிப்ட் அப்படியாகவும் , கதாபாத்திரங்கள் அப்படியாகவும் இருக்கும் அப்படினு சொன்னேன். செல்வராகவன் சார் சில நேரங்களில் அழுத்தம் காரணமாக என்னை சத்தம் போடுவார். அந்த சமயத்தில் தனுஷ்தான் எனக்கு ஆறுதலாக பேசி என்னை சமாதானம் செய்வார்.’ தனது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார் சோனியா அகர்வால்.
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
This website uses cookies.