Categories: தமிழகம்

உக்ரைனில் இருக்கும் மகன்களை மீட்டு தர வேண்டும் : ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கண்ணீர் கோரிக்கை!!

திருப்பூர் : உக்ரைனில் இருக்கும் மகன்களை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு அளித்தனர்.

இந்தியாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் மருத்துவம் பயில்வதற்காக உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ள சூழ்நிலையில் தற்போது ரஷ்யா உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் இந்தியாவிலிருந்து சென்ற மாணவர்களின் பெற்றோர் பதற்றம் அடைந்துள்ளனர் .

குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிகளவு மாணவர்கள் சென்றுள்ள நிலையில் அவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர் .

அந்த வகையில் திருப்பூர் முத்தனம்பாளையத்தை சேர்ந்த இந்திராணி பன்னீர்செல்வம் தம்பதியினரின் மூத்த மகன் அரவிந்த் முதலாம் ஆண்டு மருத்துவம் பயில்வதற்காக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார்.

மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து கூடிய சூழ்நிலையில் போர் துவங்குவதற்கு முன்பாகவே விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில் போர் தொடங்கி விட்டதால் டிக்கெட் ரத்தாகியிருப்பதாகவும் , தற்போது விடுதியில் உள்ள பாதாள அறைகளில் தங்கி இருப்பதாகவும் உணவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் போர் தீவிரமாகும் முன்பாக தங்கள் மகனை மீட்டு வர வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் இன்று மனு அளித்தனர்.

இதேபோல் திருப்பூர் குமார் நகர் பகுதியை சேர்ந்த வாசு – சித்ரா தம்பதியினரின் மகன் முத்தையாலு சபரிஷ் அதே கல்லூரியில் ஆறாம் ஆண்டு படித்து வருவதாகவும் தங்கள் மகனையும் பாதுகாப்பாக மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தொலைபேசி வாயிலாக நமது செய்தியாளர்களிடம் பேசிய இரண்டு மாணவர்களும் தற்போது வரை அப்பகுதியில் பதற்றம் மிக அதிக அளவில் இல்லை எனவும் தொடர்ந்து தூரத்தில் இருந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் தாங்கள் தொடர்பு கொண்டால் தொடர்பு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதாகவும் தங்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

14 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

15 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

15 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

16 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

16 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

16 hours ago

This website uses cookies.