தமிழகம்

உடைகிறதா திமுக – காங்கிரஸ் கூட்டணி..? இதற்காக ’அதை’ செய்யவில்லையா? EX CM சொல்வது என்ன?

புதுச்சேரியில் எதிர்கட்சி அந்தஸ்தில் உள்ள திமுகவுக்கும், அதனுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரி: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், புதுச்சேரியில் என்.ஆர்​.​காங்​கிரஸ் – பாஜக கூட்டணியை எதிர்த்து, காங்கிரஸ் – திமுக கூட்டணி போட்டி​யிட்டது. 30 தொகுதி​களிலும் போட்டி​யிட்ட இந்தக் கூட்ட​ணி, 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக, திமுக 6 இடங்களைப் பிடித்த நிலையில், திமுகவை விட கூடுதலான இடங்களில் போட்டி​யிட்ட காங்கிரஸ் இரண்டு இடங்களில் மட்டுமே வென்றது.

இதனால், அங்கீகரிக்​கப்பட்ட எதிர்கட்​சி​யானது திமுக. ஆனால், ஆளும் கட்சியாக இருந்த தங்களுக்கு எதிர்​கட்சி அந்தஸ்​து கூட கிடைக்​காமல் போனதில் புதுச்சேரி காங்கிரஸ் வருத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இதனால் திமுக – காங்கிரஸ் இடையே ஆரம்பம் முதலே மோதல் இருந்து வருகிறது.

மேலும், சமீபத்தில், புதுச்சேரி அரசு தொழில்​நுட்ப பல்கலைக்​கழகத்தில் படிக்கும் வட மாநில மாணவி​யிடம் நான்கு பேர் அத்துமீறி நடந்து கொண்ட விவகாரம் அரசுக்கு எதிராகத் திரும்​பிய நிலையில், அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல்கள் ஒலித்தா. காங்கிரஸ் கட்சி​யினரும் போராட்டம் நடத்தினர்.

ஆனால், திமுக தரப்பில் எந்தவித போராட்​டத்​தையும் அறிவிக்க​வில்லை, அக்கட்சியின் மாநிலத் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா. காரணம், தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் இருக்கும் நிலையில், வடமாநில மாணவி விவகாரத்தில் தலையிட்டால் பாஜக கூட்டணி இதனைத் திருப்பும் என்பதால் சிவா தவிர்த்திருக்​கலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ’ஆத்தி போலீசு’.. ஓடிய திமுக கவுன்சிலரின் மகன்.. பட்டாக் கத்திகளுடன் சிக்கியது எப்படி?

இந்த நிலையில், இது தொடர்பாக தனியார் நாளிதழுக்குப் பேசிய சிவா, “வடமாநில மாணவி விவகாரத்தில் காங்கிரஸ் அவர்கள் எண்ணத்தின் அடிப்​படையில் போராட்டம் நடத்துகின்றன, அதில் நாங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த விஷயத்தில் காங்கிரஸ் அரசியல் செய்ய​வில்லை, அவர்களின் அரசியலைச் செய்கின்​றனர்” எனக் கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளித்து பேட்டி அளித்துள்ள புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயண​சாமி, “ஆளுங்கட்சி, எதிர்​கட்சி என்ற வித்த​யாசமின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்​கின்​றனர். நாங்கள் யாரையும் போராட்​டத்​துக்கு அழைக்கவில்லை. எங்கள் கட்சியின் வேலையைச் செய்கிறோம். அவர்க,ள் அவர்களது கட்சியின் வேலையைச் செய்கின்​றனர். திமுக கூட்ட​ணியில் நாங்கள் இருக்​கிறோமா இல்லையா என்பதை திமுகவிடம்தான் கேட்க வேண்டும்” எனக் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

13 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

13 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

14 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

14 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

15 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

15 hours ago

This website uses cookies.