சென்னை : மாற்றுத்திறன் கொண்ட 6 வயது மாணவியை பள்ளி ஆசிரியர் அடித்து சூடு வைத்ததாக மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை – வியாசர்பாடி தாமோதரன் 1வது தெரு பகுதியில் வசித்து வருபவர் திவ்யா (27). இவருடைய கணவர் முத்து கிருஷ்ணன் நான்கு வருடத்திற்கு முன்பு இறந்த விட்டார். இவருக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
திவ்யா பியூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார். இவரது 6 வயது மகள் பிறந்தது முதல் மன வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளதால், அவரை பெரம்பூரில் உள்ள ஸ்பெஷல் மாணவர்களுக்கான தனியார் பள்ளியில் கடந்த நான்காம் தேதி சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கம் போல் கடந்த 17ம் தேதி காலையில் சிறுமியின் தாத்தா கலைச் செல்வன் என்பவர் சிறுமியை பள்ளியில் விட்டு விட்டு மதியம் நேரத்தில் சிறுமியை வீட்டுக்கு அழைத்து செல்ல வரும் போது, பள்ளி ஆசிரியர் கவிதா என்பவர் சிறுமியின் தாத்தாவை அழைத்து சிறுமியின் வலது கணுக்கால், இடது கணுக்கால் மற்றும் வலது மணிக் கட்டில் காயம் உள்ளது என்றும், எதற்காக பள்ளிக்கு அனுப்புகிறீர்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு கலைச் செல்வன் சிறுமி வீட்டில் இருக்கும் போது எந்த வித காயமும் ஏற்படவில்லை என்றும், பள்ளியில் தான் காயம் ஏற்பட்டு உள்ளது என்று கூறி, சிறுமியின் தாய் திவ்யாவிற்கு தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் சிறுமியின் தாய் திவ்யா பள்ளிக்கு வந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஆத்திரத்தில், பள்ளியில் உள்ள கதவின் 2 கண்ணாடிகளை தலையில் இடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் போலீசார் சிறுமியை பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரை பெற்று கொண்ட செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.