சென்னை : மாற்றுத்திறன் கொண்ட 6 வயது மாணவியை பள்ளி ஆசிரியர் அடித்து சூடு வைத்ததாக மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை – வியாசர்பாடி தாமோதரன் 1வது தெரு பகுதியில் வசித்து வருபவர் திவ்யா (27). இவருடைய கணவர் முத்து கிருஷ்ணன் நான்கு வருடத்திற்கு முன்பு இறந்த விட்டார். இவருக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
திவ்யா பியூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார். இவரது 6 வயது மகள் பிறந்தது முதல் மன வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளதால், அவரை பெரம்பூரில் உள்ள ஸ்பெஷல் மாணவர்களுக்கான தனியார் பள்ளியில் கடந்த நான்காம் தேதி சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கம் போல் கடந்த 17ம் தேதி காலையில் சிறுமியின் தாத்தா கலைச் செல்வன் என்பவர் சிறுமியை பள்ளியில் விட்டு விட்டு மதியம் நேரத்தில் சிறுமியை வீட்டுக்கு அழைத்து செல்ல வரும் போது, பள்ளி ஆசிரியர் கவிதா என்பவர் சிறுமியின் தாத்தாவை அழைத்து சிறுமியின் வலது கணுக்கால், இடது கணுக்கால் மற்றும் வலது மணிக் கட்டில் காயம் உள்ளது என்றும், எதற்காக பள்ளிக்கு அனுப்புகிறீர்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு கலைச் செல்வன் சிறுமி வீட்டில் இருக்கும் போது எந்த வித காயமும் ஏற்படவில்லை என்றும், பள்ளியில் தான் காயம் ஏற்பட்டு உள்ளது என்று கூறி, சிறுமியின் தாய் திவ்யாவிற்கு தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் சிறுமியின் தாய் திவ்யா பள்ளிக்கு வந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஆத்திரத்தில், பள்ளியில் உள்ள கதவின் 2 கண்ணாடிகளை தலையில் இடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் போலீசார் சிறுமியை பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரை பெற்று கொண்ட செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.