நடிகை கஸ்தூரி அண்மையில் பிராமணர்கள் ஆர்ப்பாட்டத்தில் பேசியது சர்ச்சையானது.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து பேசிய கஸ்தூரி அவதூறாக பேசியதாக மாநிலம் முழுவதும் புகார் எழுந்தது. தெலுங்கு பெண்களை இழிவுப்படுத்தியதால் தெலுங்கு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விஷயம் நாடு முழுவதும் பரவி வைரலான நிலையல் மன்னிப்பு கேட்பதாக கூறினார். இந்த நிலையில் அவர் மீது சென்னை, மதுரை காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இதையும் படியுங்க: மறைந்த டெல்லி கணேஷ் உடலுக்கு விமானப்படை ராயல் சல்யூட்.. ஏன் தெரியுமா?
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கஸ்தூரியில் விசாரணைக்காக சென்ற போது அவர் தலைமறைவாகியிருந்தது தெரியவந்தது.
வீட்டை பூட்டி விட்டு தலைமறைவான கஸ்தூரியை போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து கஸ்தூரியிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு சென்றுள்ளனர்.
போலீசார் தேடுவது தெரிந்ததும் நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு என் மீது வழக்குபதியப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நாளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.